சனி, 20 ஜனவரி, 2018

காந்தியம்

விளையும் பயிர்:*.காந்தியடிகள் சிறுவனாக இருந்தப்போதுகேட்ட குஜராத்தி பாடல் மூலம் அவருக்கு இன்னாசெய்யாமை(அஹிம்சை) என்னும் கருத்து அவருள் வேரூன்றியது.*.“சிரவண பிதுர்பத்தி”என்னும் நாடக நூலைப் படித்தான் மூலம் பெற்றோரிடம்அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் வந்தது.*.அரிச்சந்திரன் நாடகம்பார்த்த பின் அவருக்கு பொய் பேசக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.*.இயேசுநாதரின் மலைச்சொற்பொழிவை பற்றிய நூலைப் படித்தப் பொது அதன் கருத்துகள் அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.*.பகவத் கீதையை படித்ததன் மூலம் மனவுறுதியைப் பெற்றார்.*.ரஷ்ய அறிஞர் தால்சுதாய் எழுதிய “உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்னும் நூலில் “இன்னாசெய்தார்க்கும்” என்னும் திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அந்நூலினை படிக்கும் பொது திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்று ஏற்பட்டது.அறவழி விடுதலைப்போர்:*.“மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையாகவும் இருந்தால் மட்டும் போதாது.*.அதனை அடையும் வழிமுறைகளும் தூயமையானதாகப் பிறருக்குத் துன்பம் தராததாக இருக்கவேண்டும்” என்றார்.*.“வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது” என்றார்.எளிமை ஒரு அறம்:*.ஆசிரமத்தில் தாமே சமையல் செய்து அனைவருக்கும் கொடுத்தார்.*.கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றார்.*.எளிமையை ஒரு அறமாகவே போற்றினார்.*.காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த பொது, ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியத்தை கண்டு தாமும் அன்று முதல் மேலாடை அணிவதை நிறுத்திக்கொண்டார்.*.அரையாடையுடன் இங்கிலாந்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துக்கொண்ட காந்தியடிகளை“அரை நிருவாணப் பக்கிரி”என்று ஏளனம் செய்தார் அப்போதையஇங்கிலாந்து பிரதமர் சர்ச்சில்.மனித நேயம்:*.மனிதரோடு மனிதராக வாழ்ந்து மகாத்மாவாக உயர்ந்தவர்.*.என்னைப் பொறுத்தவரைதேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்று தான்என்றார் காந்தியடிகள்.*.நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்கு மேல் மனிதாபிமானியாக இருப்பதும் தான் என்றார்.*.மனிதர் மொழியாலும் நாட்டாலும் உணர்தப்படுவதை காட்டிலும் மனிதத்தன்மையால் பிறருக்கு உணர்த்தப் படுவதே சிறந்து என்பார்.*.“உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும்” என்றார்.இன்னா செய்யாமை:*.தென்னாப்ப்ரிகாவில் இந்தியர்களுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக்காந்தியடிகள் கொளுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.*.சிறையில் சிறப்பாக ஒரு ஜோடி செருப்பை தைத்தார். அதனை தன்னை சிறையில் அடைத்த ஆளுநர் ஸ்மட்ஸ் என்பவருக்கு அளித்தார்.*.அவரும் இவருக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களை பரிசாக கொடுத்தார்.*.ஸ்மட்ஸ்,காந்தியடிகள் இறந்த பொது, அவர் கொடுத்த காலனியை தன் பூசை அறையில் வைத்து வணங்கி வருவதாக கூறினார்.இளைஞர்களின் கடமை:*.நமது நாட்டிற்கே உரிய கிராமத் தொழில்களையும் நாட்டுப்புறக் கலைகளையும் வளர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.*.“தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது” என்றார்.*.தீண்டாமைக் கொடுமையை வலுவுடன் எதிர்த்து நிற்குமாறு இளைஞர்களுக்குஅறிவுறுத்தினார்.

புறப்பொருள் தினைகள்

புறப்பொருள் திணைகள்துணைப் பகுப்புகள்இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.        ►வஞ்சித் திணையின் துறைகள்‎(20 பக்.)          ►வெட்சித் திணையின் துறைகள்‎(4 பக்.)"புறப்பொருள் திணைகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன *.உழிஞைத் திணைக  *.கரந்தைத் திணை                      * .காஞ்சித் திணை          *.தும்பைத் திணை       *.நொச்சித் திணைப      *.பாடாண் திணை   *.பொதுவியல் திணை   *.வஞ்சித் திணை          *.வாகைத் திணை        *.வெட்சித்தனை *.வெட்சித்துறைகள

புறப்பொருள்

புறப்பொருள்வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும்தொல்காப்பியம்என்னும்பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும்.புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள் என்னும் நூலின் தலைப்புகளும் புறப்பொருள் அகப்பொருள் என்னும் பாகுபாடுகளையே குறிப்பிடுகின்றன.பழந் தமிழர் வாழ்வியலில்போர்,அரசியல்முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம்புறப்பொருள்என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும்இலக்கியங்களைப்புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவதுதமிழ் இலக்கியமரபு.புறத்திணைப் பிரிவுகள்புறப்பொருளில் உள்ள துறைப் பிரிவுகளைத்தொல்காப்பியர்ஏழுஎனக் காட்டுகிறார்.புறப்பொருள் வெண்பாமாலை12 எனப் பகுத்துக் காட்டுகிறது.தொல்காப்பிய நெறிபண்டைத்தமிழ் இலக்கணநூலானதொல்காப்பியம்அதன் பொருளதிகாரத்தில் அகப்பொருளில் உள்ள திணைகள், புறப்பொருளில் உள்ள திணைகள் பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.1.வெட்சித் திணை2.வஞ்சித் திணை3.உழிஞைத் திணை4.தும்பைத் திணை5.வாகைத் திணை6.காஞ்சித் திணை7.பாடாண் திணைஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந்நாட்டுஎல்லையூடுபுகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறுகளவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டுவருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீதுபடைநடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக்கோட்டையைமுற்றுகை இடுவதையும், அக்கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர்செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான பொருள்களை விளக்குவது காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன.புறப்பொருள் வெண்பாமாலை நெறிவெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.

புறப்பொருள்

புறப்பொருள்வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும்தொல்காப்பியம்என்னும்பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும்.புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள் என்னும் நூலின் தலைப்புகளும் புறப்பொருள் அகப்பொருள் என்னும் பாகுபாடுகளையே குறிப்பிடுகின்றன.பழந் தமிழர் வாழ்வியலில்போர்,அரசியல்முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம்புறப்பொருள்என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும்இலக்கியங்களைப்புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவதுதமிழ் இலக்கியமரபு.புறத்திணைப் பிரிவுகள்புறப்பொருளில் உள்ள துறைப் பிரிவுகளைத்தொல்காப்பியர்ஏழுஎனக் காட்டுகிறார்.புறப்பொருள் வெண்பாமாலை12 எனப் பகுத்துக் காட்டுகிறது.தொல்காப்பிய நெறிபண்டைத்தமிழ் இலக்கணநூலானதொல்காப்பியம்அதன் பொருளதிகாரத்தில் அகப்பொருளில் உள்ள திணைகள், புறப்பொருளில் உள்ள திணைகள் பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.1.வெட்சித் திணை2.வஞ்சித் திணை3.உழிஞைத் திணை4.தும்பைத் திணை5.வாகைத் திணை6.காஞ்சித் திணை7.பாடாண் திணைஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந்நாட்டுஎல்லையூடுபுகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறுகளவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டுவருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீதுபடைநடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக்கோட்டையைமுற்றுகை இடுவதையும், அக்கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர்செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான பொருள்களை விளக்குவது காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன.புறப்பொருள் வெண்பாமாலை நெறிவெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.

நந்திக் கலம்பகம்

நந்திக் கலம்பகம்இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது.நந்திக் கலம்பகம்தமிழில் உருவானகலம்பகஇலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்தமூன்றாம் நந்திவர்மன்குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மல்லை (மாமல்லபுரம்), மயிலை( மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.

குலசேகர ஆழ்வார் குறிப்பு

நாலாயிரத் திவ்வியபிரபந்தம்பொய்கையாழ்வார்பூதத்தாழ்வார்பேயாழ்வார்திருமழிசையாழ்வார்நம்மாழ்வார்மதுரகவியாழ்வார்பெரியாழ்வார்ஆண்டாள்திருமங்கையாழ்வார்தொண்டரடிப்பொடி ஆழ்வார்திருப்பாணாழ்வார்குலசேகர ஆழ்வார்குலசேகர ஆழ்வார்குறிப்பு:*.இவர் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.*.இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.*.அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.*.இவர் கௌத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர்*.இவர் வடமொழியில் “முகுந்த மாலை” என்னும் நூலினை எழுதியுள்ளார்*.இவர் இராமனுக்கு தாலாட்டுபாடியவர்*.ஒவ்வொரு வைணவத் திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன்படி” என்ற பெயரில் வழங்கப்படும்*.திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர்கட்டினார்வேறு பெயர்கள்:*.கொல்லிக் காவலன்*.கூடல் நாயகன்*.கோழிக்கோபடைப்பு:*.பெருமாள் திருமொழிமேற்கோள்:*.ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழவானாளுஞ் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்மீனாய்ப் பிறக்கும் விதியுடைய னாவேனே*.மீன்னோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேன