புறப்பொருள்வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும்தொல்காப்பியம்என்னும்பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும்.புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள் என்னும் நூலின் தலைப்புகளும் புறப்பொருள் அகப்பொருள் என்னும் பாகுபாடுகளையே குறிப்பிடுகின்றன.பழந் தமிழர் வாழ்வியலில்போர்,அரசியல்முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம்புறப்பொருள்என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும்இலக்கியங்களைப்புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவதுதமிழ் இலக்கியமரபு.புறத்திணைப் பிரிவுகள்புறப்பொருளில் உள்ள துறைப் பிரிவுகளைத்தொல்காப்பியர்ஏழுஎனக் காட்டுகிறார்.புறப்பொருள் வெண்பாமாலை12 எனப் பகுத்துக் காட்டுகிறது.தொல்காப்பிய நெறிபண்டைத்தமிழ் இலக்கணநூலானதொல்காப்பியம்அதன் பொருளதிகாரத்தில் அகப்பொருளில் உள்ள திணைகள், புறப்பொருளில் உள்ள திணைகள் பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.1.வெட்சித் திணை2.வஞ்சித் திணை3.உழிஞைத் திணை4.தும்பைத் திணை5.வாகைத் திணை6.காஞ்சித் திணை7.பாடாண் திணைஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந்நாட்டுஎல்லையூடுபுகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறுகளவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டுவருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீதுபடைநடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக்கோட்டையைமுற்றுகை இடுவதையும், அக்கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர்செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான பொருள்களை விளக்குவது காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன.புறப்பொருள் வெண்பாமாலை நெறிவெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக