விளையும் பயிர்:*.காந்தியடிகள் சிறுவனாக இருந்தப்போதுகேட்ட குஜராத்தி பாடல் மூலம் அவருக்கு இன்னாசெய்யாமை(அஹிம்சை) என்னும் கருத்து அவருள் வேரூன்றியது.*.“சிரவண பிதுர்பத்தி”என்னும் நாடக நூலைப் படித்தான் மூலம் பெற்றோரிடம்அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் வந்தது.*.அரிச்சந்திரன் நாடகம்பார்த்த பின் அவருக்கு பொய் பேசக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.*.இயேசுநாதரின் மலைச்சொற்பொழிவை பற்றிய நூலைப் படித்தப் பொது அதன் கருத்துகள் அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.*.பகவத் கீதையை படித்ததன் மூலம் மனவுறுதியைப் பெற்றார்.*.ரஷ்ய அறிஞர் தால்சுதாய் எழுதிய “உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்னும் நூலில் “இன்னாசெய்தார்க்கும்” என்னும் திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அந்நூலினை படிக்கும் பொது திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்று ஏற்பட்டது.அறவழி விடுதலைப்போர்:*.“மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையாகவும் இருந்தால் மட்டும் போதாது.*.அதனை அடையும் வழிமுறைகளும் தூயமையானதாகப் பிறருக்குத் துன்பம் தராததாக இருக்கவேண்டும்” என்றார்.*.“வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது” என்றார்.எளிமை ஒரு அறம்:*.ஆசிரமத்தில் தாமே சமையல் செய்து அனைவருக்கும் கொடுத்தார்.*.கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றார்.*.எளிமையை ஒரு அறமாகவே போற்றினார்.*.காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த பொது, ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியத்தை கண்டு தாமும் அன்று முதல் மேலாடை அணிவதை நிறுத்திக்கொண்டார்.*.அரையாடையுடன் இங்கிலாந்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துக்கொண்ட காந்தியடிகளை“அரை நிருவாணப் பக்கிரி”என்று ஏளனம் செய்தார் அப்போதையஇங்கிலாந்து பிரதமர் சர்ச்சில்.மனித நேயம்:*.மனிதரோடு மனிதராக வாழ்ந்து மகாத்மாவாக உயர்ந்தவர்.*.என்னைப் பொறுத்தவரைதேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்று தான்என்றார் காந்தியடிகள்.*.நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்கு மேல் மனிதாபிமானியாக இருப்பதும் தான் என்றார்.*.மனிதர் மொழியாலும் நாட்டாலும் உணர்தப்படுவதை காட்டிலும் மனிதத்தன்மையால் பிறருக்கு உணர்த்தப் படுவதே சிறந்து என்பார்.*.“உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும்” என்றார்.இன்னா செய்யாமை:*.தென்னாப்ப்ரிகாவில் இந்தியர்களுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக்காந்தியடிகள் கொளுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.*.சிறையில் சிறப்பாக ஒரு ஜோடி செருப்பை தைத்தார். அதனை தன்னை சிறையில் அடைத்த ஆளுநர் ஸ்மட்ஸ் என்பவருக்கு அளித்தார்.*.அவரும் இவருக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களை பரிசாக கொடுத்தார்.*.ஸ்மட்ஸ்,காந்தியடிகள் இறந்த பொது, அவர் கொடுத்த காலனியை தன் பூசை அறையில் வைத்து வணங்கி வருவதாக கூறினார்.இளைஞர்களின் கடமை:*.நமது நாட்டிற்கே உரிய கிராமத் தொழில்களையும் நாட்டுப்புறக் கலைகளையும் வளர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.*.“தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது” என்றார்.*.தீண்டாமைக் கொடுமையை வலுவுடன் எதிர்த்து நிற்குமாறு இளைஞர்களுக்குஅறிவுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக