சனி, 30 டிசம்பர், 2017
வெள்ளி, 29 டிசம்பர், 2017
நோய் நீக்கும் மூலிகைகள்
துளசிச்செடியின்இலைகளைநீரிலிட்டுக்கொதிக்கவைத்துஆவிபிடித்தால்மார்புச்சளி,நீர்க்கோவை,தலைவலிநீங்கும்.இதன்இலைகளைஎலுமிச்சம்பழச்சாற்றுடன்அரைத்துப்போடப்படைநீங்கும்;விதைகளைப்பொடிசெய்துஒன்றுஅல்லதுஇரண்டுகிராம்அளவுஉண்டால்உடற்சூடு,நீரெரிச்சல்ஆகியனஅடங்கும்.·
கீழாநெல்லியைகீழ்க்காய்நெல்லி,கீழ்வாய்நெல்லிஎனவும்குறிப்பிடுவர்.இதுமஞ்சட்காமாலைக்குஎளியமருந்தாகஇன்றும்பயன்பட்டுவருகிறது.· காய்களுடன்கூடியமுழுக்கீழாநெல்லிச்செடியைத்தூயநீரில்கழுவிஅரைத்துவிழுதாக்கிக்கொள்ளல்வேண்டும்.ஐம்பதுகிராம்அளவுள்ளவிழுதைஇருநூறுமில்லிலிட்டர்எருமைத்தயிருடன்கலந்து,காலைஆறுமணியளவில்வெறும்வயிற்றில்உட்கொள்ளல்வேண்டும்.இவ்வாறுமூன்றுநாள்தவிராமல்உட்கொண்டால்மஞ்சட்காமாலைநோய்தீரும்.·
மருந்துண்ணும்நாளில்மோரும்,மோர்ச்சோறும்உட்கொள்வதுநல்லது.கீழாநெல்லிஇலைகளைக்கற்கண்டுடன்சேர்த்துஅரைத்துமூன்றுகிராம்அளவுகாலைமாலைஇருவேளைநாலுநாள்தொடர்ந்துஉட்கொள்ளசிறுநீர்த்தொடர்பானநோய்கள்நீங்கும்.
வியாழன், 28 டிசம்பர், 2017
பாரதரத்னா எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை இவர் ஒருமலையாளியாகஇருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும்,திராவிட முன்னேற்றக் கழகத்தின்முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார்.சி. என். அண்ணாத்துரையின்மறைவுக்குப் பின்,மு. கருணாநிதிமுதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.1972-இல்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்டதிண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.
புதன், 27 டிசம்பர், 2017
பாரதரத்னா எம்.ஜி.ஆர்
மக்களின் மனங்களில் இதய தெய்வமாக போற்றப்பட்டவர் “எம்.ஜி.ஆர் .அவர்களின் இதயம், இமயம் போன்றது; அவருடைய உள்ளம் பெரியது; குணம் தங்கம் போன்றது என்று அறிஞர் அண்ணா அவர்களே போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளார் என்றால் அவரின் பண்புக்கு வேறு புகழுரையும் வேண்டுமா!1988 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஜனவரி 17இல் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டது. 13.01.1992 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.
செவ்வாய், 26 டிசம்பர், 2017
பெரியபுராணம்
பெரியபுராணம் அல்லதுதிருத்தொண்டர் புராணம்என்பதுசேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவகாப்பியமாகும்.சுந்தரமூர்த்தி சுவாமிகளின்திருத்தொண்டத் தொகைஎனும் நூலை முதல் நூலாககொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும்இந்நூலில் விவரிக்கிறார்.[1]அத்துடன்திருத்தொண்டத் தொகை,நம்பியாண்டார் நம்பிஎழுதியதிருத்தொண்டர் திருவந்தாதிஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது.[2]
சனி, 23 டிசம்பர், 2017
குறுந்தொகை
குறுந்தொகைஎட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள்.உரையாசிரியர்கள்பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில்தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும்நற்றிணை,அகநானூறுஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது.இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ
வெள்ளி, 22 டிசம்பர், 2017
அண்ணாவின் கடிதம்
தமிழர் திருநாள் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள் உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் சளைப்பிலா முயற்சிதரு பயன்பெற்றுப் புதுமை இன்பம் பூணும் நன்னாள் என்று முடியரசன் முழங்குகிறார்
புதன், 20 டிசம்பர், 2017
நற்றினை
அரிகால் மாறியா அங்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே ..................மிளைகிழான் நல்வேட்டனார்
செவ்வாய், 19 டிசம்பர், 2017
யோகா
படுத்தநிலை ஆசனங்கள்
.சலபாசனம் . தனுராசனம் .புஜங்காசனம்.ஹாலாசனம் .பவனமுத்தாசனம் .விபரீதகரினி போன்ற ஆசனங்கள் தேர்வு வைக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சி
தமிழ் வளர்ச்சி – பாவேந்தர் பாரதிதாசன் .எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாகவிளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டுதெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்துசெந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!
திங்கள், 18 டிசம்பர், 2017
வள்ளலார்
வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்க அடிகள். பிறப்பு : 05:10:1823 மறைவு : 30.01.1874 இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.இவர்தம் பெற்றோர் இராமையாபிள்ளை - சின்னம்மையார். இவர் ஓர் ஆன்மீகவாதி, சமய போதகர், சமூக சீர்திருத்தவாதி, சித்த மருத்துவர், தமிழ் எழுத்தாளர். திருவருட்பா, மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவரது நூல்களாகும். இவரது திருவருட்பா ஆறு பகுதிகளாக பிரித்து ஆறு திருமுறைகளாக வெளியிடப்பட்டுள்ளது.இவர் சமரச சுத்த சன்மார்க்க நெறியை உலகிற்கு எடுத்துரைத்தார். அனைத்து மத நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தருமச்சாலையையும் நிறுவினார். மேலும் அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவினார். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய கருணை மனம் கொண்டவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.
நூலகம்
நூலகத்தின் வேறு பெயர்கள்.
புத்தகச்சாலை் .ஏடகம்.சுவடியகம.சுவடிச்சாலை. வாசகசாலை.படிப்பகம். நூல்நிலையம் .பண்டாரம் என அழைக்கப்படுகிறது.ஆங்கிலத்தில் லைப்ரரி என்று தமிழ் சொல்லுக்கு இணையாக வழங்குகிறது.லத்தின் மொழியில் லிப்ரா என்ற சொல்லுக்கு புத்தகம் என்பது பெயர்
ஞாயிறு, 17 டிசம்பர், 2017
உயர்தனிச் செம்மொழி
"திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி புகல் செம்மொழியாம்' என்பது இலக்கணம். இம் மொழி நூல் இலக்கணம் நம்முடைய தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொல் முடிபுகளும் பொருள் முடிபு களும் இன்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதின் உணரவற்றாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்த மெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் மொழிக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற் படுமிடத்துப் பிறமொழி சொற்களன்றித் தன் சொற்களே மேற்கோடல் வேண்டும். இவையும் நம் உயர்தனித் தமிழ் மொழிக்கும் பொருந்துவனவாம்.
சனி, 16 டிசம்பர், 2017
ஏலாதி பாடல்
வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு நுணங்கிநூல் நோக்கி நுழையா இணங்கிய பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய் நூல்நோக்கி வாழ்வான் நுனித்து .......கணிமேதாவியார்
வெள்ளி, 15 டிசம்பர், 2017
பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மர்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
வியாழன், 14 டிசம்பர், 2017
ஏலாதி ஆசிரியர் குறிப்பு
ஏலாதிபதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதி என்பதும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏலாதி என்பது ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்களும் ஒரு குறிப்பிட்ட அளவோடு சேர்க்கப்பட்ட ஒரு வகை சூர்ணமாகும். இது உடலுக்கு வலிமை, பொலிவு, தெம்பு ஆகியவற்றைத் தரவல்லது. அதுபோல இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துகளும் மக்களின் அறியாமை நோயை நீக்கி அறிவைத் தரவல்லன. அதனால் இந்நூலுக்கு ஏலாதி என்ற பெயர் வந்தது என்பர். மருந்துப் பெயர் பெற்ற கீழ்க்கணக்கு நூல்கள் மூன்றனுள் இது மூன்றாவதாகும். ஆசிரியர்நூலின் ஆசிரியர் கணி மேதாவியார். இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர். கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு சோதிடத்தில் வல்லவர் என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலைநூற்றைம்பதினை இயற்றியவரும் இவரே என்பர். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். நூலின் அமைப்பும் பாடுபொருளும்இந்நூல் 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் ஆகிய இரு பாடல்களும் இதில் அடங்கும். இந்நூலும் ‘மகடூஉ முன்னிலை’ அமைப்பைக் கொண்டது. அதாவது, ஒரு பெண்ணை விளித்து, அவளுக்கு ஒரு கருத்தைக் கூறுகிற வகையில் பாடலை அமைப்பது. 1, 2, 6, 7, 13, 21, 28, 29, 31, 32, 33, 56, 76 ஆகிய எண்களைக் கொண்ட செய்யுள்களில் இந்த விளியைக் காணலாம்.சமண சமயத்திற்குரிய சிறந்த அறநெறிகளாகிய கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றையும் காமம், கள் ஆகியவற்றையும் நீக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுகிறது. இல்லறம், துறவறம் ஆகிய நெறிகளையும் விளக்குகிறது. சமண சமய நூலாக இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள அறநெறிகள் அனைவர்க்கும் பொதுவான பொதுமை நெறிகளாக அமைந்துள்ளமை இதன் சிறப்பு எனலாம். இந்நூலாசிரியர் காலம் நான்காம் நூற்றாண்டு.
புதன், 13 டிசம்பர், 2017
ஏலாதி
ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்தமிழ் இலக்கியம்சங்க இலக்கிய நூல்கள்எட்டுத்தொகைபத்துப்பாட்டுபதினெண்மேற்கணக்குஎட்டுத்தொகைநற்றிணைகுறுந்தொகைஐங்குறுநூறுபதிற்றுப்பத்துபரிபாடல்கலித்தொகைஅகநானூறுபுறநானூறுபத்துப்பாட்டுதிருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படைசிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படைமுல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சிநெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டுபட்டினப்பாலைமலைபடுகடாம்பதினெண்கீழ்க்கணக்குநாலடியார்நான்மணிக்கடிகைஇன்னா நாற்பதுஇனியவை நாற்பதுகளவழி நாற்பதுகார் நாற்பதுஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பதுஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பதுதிருக்குறள்திரிகடுகம்ஆசாரக்கோவைபழமொழி நானூறுசிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சிஏலாதிகைந்நிலைசங்கநூல் தரும் செய்திகள்தமிழ்ச் சங்கம்சங்கம் மருவிய காலம்சங்க காலப் புலவர்கள்சங்ககால நிலத்திணைகள்சங்க கால ஊர்கள்சங்க கால மன்னர்கள்சங்க கால நாட்டுமக்கள்சங்க காலக் கூட்டாளிகள்சங்ககால விளையாட்டுகள்பாஉதொபதினெண்கீழ்க்கணக்குநூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்றுஏலாதி.சமண சமயத்தைச்சேர்ந்தவரானகணிமேதாவியார்என்பவரால் எழுதப்பட்டது இந்நூல்.திணைமாலை நூற்றைம்பதுஎன்னும்அகப்பொருள்நூலை இயற்றியவரும் இவரே. ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.நூல் பெயற்காரணம்இந்நூலின் பெயர்ஏலத்தைமுதலாகக் கொண்ட இலவங்கம்,சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்டஏலாதிஎன்னும்மருந்துஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ளபாடல்கள்ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின்ஒழுக்கக்குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.எடுத்துக்காட்டுஇடையின்அழகோ,தோளின்அழகோ அல்லது ஈடு இல்லாத வேறு அழகுகளோ,நடைஅழகோ,நாணத்தினால்ஏற்படும் அழகோ,கழுத்தின்அழகோ உண்மையான அழகு ஆகா. எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவதுகல்வியினால்ஏற்படும் அழகேஅழகுஎன்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று இது:இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)எழுத்தின் வனப்பே வனப்ப
செவ்வாய், 12 டிசம்பர், 2017
தொன்மை தமிழகம்
லெமூரியா கண்டத்தின் தொன்மையான பகுதியே இன்றைய தமிழகம்.டைனசோர் வாழ்ந்த மண்ணே நம் தமிழக மண்.சில கோடி ஆண்டுகளுக்கு முன் பெய்த கடும் மழையில் மரங்கள் அடித்து செல்லப்பட்டு ,ஆழமிக்க ஏரிகளில் புதைந்து காலப் போக்கில் பூமியில் ஏற்படும் அதிகபடி யான அழுத்தங்களால் கல்லாக மாறின. இது போன்ற இயற்கையின் அறிய வகை செல்வங்கள் உலகில் தொன் மையான நிலப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். அதில் தமிழர் நாடும் ஒன்று .அவ்வாறுகிடைத்த அரிய வகை செல்வங்களை , விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் தாலுக்காவில் உள்ள திருவக்கரை என்னும் ஊரில் உள்ள அருங் காட்சியகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.பெரும் மழையில் தாவரங்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஆற்றோரம் உள்ள பாறைகளின் மீது படிந்து திடிரென்று ஏற்படும் நில நடுக்கம் போன்ற இயற்க்கை சீற்றங்களால் பூமியின் ஆழப்பகுதிகளில் புதைந்து விடுகிறது.நாளடைவில் அதே பகுதியில் பாறைகள் புதைந்து ஏற்படும் அதிக படியான அழுத்தத் தால் தாவரங்களில் இருக்கும் சிலிகான் என்று மூலப் பொருள் பாறைகளின் மீது படிந்து பாறையோடு பாறையாக மாறி விடுகிறது . இவ்வாறு மாறுவதற்கு இரண்டு லட்சம் கோடி ஆண்டுகள் தேவை படுகிறது . இது போன்ற கற்கள் ஆற்றோரங்களில் மட்டுமே கிடைக்கும் . திருச்சியில் இது போன்ற பாறை கற்கள் கிடைத்துள்ளன .2009 ஆண்டு அக்டோபரில் சேலம் பெரியார் பழகலை கழக ஆய்வாளர்கள் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனசோர் முட்டைகளின் படிவங்களை ஆயிரக்கணக்கில் தமிழர் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் கண்டு பிடித்தனர் .சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் கற்காலதமிழர்கள் பயன் படுத்திய கல் ஆயுதங்களையும் , .சென்னை அருகே அதிரம்பட்டினம் என்ற ஊரில் கற்கால தமிழர் கள் வாழ்ந்த குகையையும் ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்து ஆவணப் படுத்தியுள்ளனர் .என்றும் அவ்வூர் மக்கள் அக்குகையை இன்றும் காளி கோயிலாக வழி படுகின்றனர் . அக் குகையின் உட்புறம் சிறு உருண்டை வடிவிலான பாறை உருகிய நிலையில் ஆங்காங்கே காட்சி அளிக்கிறது .அறிவியல் ஆய்வாளர்கள், எரிமலை வெடிப்பின் போது உருகி வரும் பாறை குழம்புகளால் இந்த குகை உருவாகி யிருக்கும் என்றும் அப்பொழுது பெய்த கடும் மழையால் உருகிய பாறை குழம்பு குளிர்ந்து பந்து வடிவில் அங்க ங்கே குகையின் உட்புறத்திலேயே பாறையாக உருமாறி இருக்கிறது .இந்த குகையில் சில லட்சம் ஆண்டுகளு க்கு முன் கற்கால தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று இதை கண்டு பிடித்த ஆங்கிலேய ஆய்வாளர் 1850 ஆண்டுகளின் இடை பகுதியில் தான் எழுதிய புத்தகத் தில் குறிப்பிட்டுள்ளார் .தமிழர் நாட்டில் கிடைத்த மேற்கண்ட சான்றுகளை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நீங்கள் காணலாம் .மேற்கண்ட சான்றுகள் நம் மண்ணின் தொன்மையை யும் , அப்போது வாழ்ந்து வந்த டைனசோர் போன்ற மிருகங்களின் அழிந்த எச்சங்கள் இங்கு கிடைப்பதை கொண்டும் , அதற்கு பிறகு மனிதன்(தமிழன்) தோன்றி, பல லட்சம் ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்த வரலாற்று சான்றுகளை கொண்டு , நம்இனத்தின் தொன்மையையும் அவர்கள் ஊடாடும் மொழியான தமிழின் தொன்மையையும் அறிந்து கொள்ளலாம் .இதன் தொடர்ச்சியாக இன்றும் பல கோடி தமிழ் மக்கள் தமிழ் மொழி யுடன் வாழ்ந்து வருகிறோம். நம் மொழிக் கும் இனத்திற்கும் தொன்மை வரலாறு உண்டு சான்று கள் உண்டு .சில தொல் பொருள் ஆய்வுகள் மூலம் கிடைத்த வரலாறுகளே தமிழனின் பெருமையை, உலகையே வியக்க செய்கிறது .இதில் திராவிடன் எங்கிருந்து வருகிறான். அவர்களுக் கென்று ஏதாவது தனி வரலாறு உண்டா என்று பார்த்தால் இல்லை என்பதே விடையாக இருக்கும் . கார்டுவெல் என்ற ஆங்கிலேய மொழியியல் அறிஞர், தமிழில் இருந்து பிறந்தவையே மலையாளம் கன்னடம் தெலுங்கு துளு என்று கூறுவதற்கு மாற்றாக, மேற் கண்ட மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் இந்த மொழி கூட்டங்களுக்கு ஆரியர்களின் சமசுகிரு தங்களுக்கு மாற்றாக திராவிடம் என்று பெயர் சூட்டினார் .அவருக்கு பின் வந்த வரலாற்று ஆய்வாளர்கள் தமிழர்கள் என்று குறிப்பிடுவதற்கு மாற்றாக திராவிடர்கள் என்று குறிப்பிட தொடங்கினர்.இன்று வரை தமிழருக்கும் ,தமிழ் மொழிக்கும் மட்டுமே வரலாறு உண்டு.திராவிடம் என்ற சொல்லின் ஆயுள் காலம்வெறும் 143 ஆண்டுகள் மட்டுமே .இந்திய நாடு தமிழனின் தொன்மையான வரலாற்றையே , உலகின் பழம் பெரும் பாரதம் என்று பெருமை பட்டு அடையாளப் படுத்தி கொள்கிறது .உலகின் தொன்மை யான மொழி இந்திய நாட்டின் மொழி என்று கூறி தமிழ் மொழியின் பெருமையை இந்தியாவின் பெருமையாக காட்டிக் கொள்கிறது. தமிழரையும் , தமிழ் மொழியையும் தனிமை படுத்தி பார்த்தால் இந்தியாவிற்கு என்று தொன்மையான வரலாறு இல்லை ..உலக மக்களுக்கு தொன்மையான் இனம் தமிழினம் என்பதையும் ,தொன்மையான மொழிதமிழ் மொழி என்பதையும் மறைக்கும் விதமாக, இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அறிவித்து , இந்தி மொழி தான் தொன்மையான மொழி போலவும் அதுவே இந்தியாவின் ஆட்சி மொழி என்று கூறி உலக மக்களை ஏமாற்றி வருகிறது .தமிழர்களே விழிப்படைவீர் இந்தியம் என்பதும் பொய்மை ,திராவிடம் என்பதும்பொய்மை . தமிழன் என்பதே உண்மை .திராவிடத்தை வீழ்த்தி தமிழனை ஆட்சி கட்டிலில் ஏற்றி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக மாற்றுவோம் .
திங்கள், 11 டிசம்பர், 2017
திரு.வி.க.தமிழ் பணி
வாழ்க்கைச் சுருக்கம் காஞ்சிபுரம்மாவட்டத்துச்சைதாப்பேட்டைவட்டத்துத்துள்ளம்என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள்சோழ நாட்டில்திருவாரூர்என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன்வணிகமும்புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.கல்விதொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர்சென்னையில்இராயப்பேட்டையில்தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர்,1894இல் வெஸ்லி பள்ளியீல் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார்.1904ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.[2]தமிழ்க் கல்விவெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்தயாழ்ப்பாணம்நா. கதிரவேற்பிள்ளைஎன்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரெவேற்பிள்ளைநீலகிரிக்குச்சென்ற பொழுது அங்கு காலமானார். அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும்சைவநூல்களையும் பாடம் கேட்டார்.ஆசிரியப் பணி1906ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில்,பால கங்காதர திலகர்போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர்1909இல்ஆயிரம் விளக்குபகுதியில்உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத்திருமணம்நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர்.1918ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.பத்திரிகைப் பணிபின்னர்தேசபக்தன்என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர்திராவிடன்,நவசக்திபோன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.அரசியல் பணிதொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.