மக்களின் மனங்களில் இதய தெய்வமாக போற்றப்பட்டவர் “எம்.ஜி.ஆர் .அவர்களின் இதயம், இமயம் போன்றது; அவருடைய உள்ளம் பெரியது; குணம் தங்கம் போன்றது என்று அறிஞர் அண்ணா அவர்களே போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளார் என்றால் அவரின் பண்புக்கு வேறு புகழுரையும் வேண்டுமா!1988 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஜனவரி 17இல் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டது. 13.01.1992 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக