வெள்ளி, 8 டிசம்பர், 2017

சென்னை அருங்காட்சியகம்

்சென்னைஅரசு         அருங்காட்சியகம்                                சென்னையின்எழும்பூர்ப்பகுதியில் அமைந்துள்ளது. 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத் தொகுதி இன்று, 16.25 ஏக்கர் (66,000சதுர மீட்டர்) பரப்பளவுள்ள நிலத்தில் அமைந்த ஆறு கட்டிடங்களுடனும் அவற்றில் அடங்கிய 46 காட்சிக்கூடங்களுடனும் விளங்குகிறது.தொல்லியல்,நாணயவியல்,விலங்கியல்,இயற்கை அறிவியல்,சிற்பம்ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.வரலாறு1846 ஆம் ஆண்டில் மதராசு கல்விக் கழகம் (Madras Literary Society), சென்னைக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அப்போது சென்னை மாகாணத்தின் பிரித்தானிய அரச ஆளுனராக இருந்த சர்ஹென்றிபாட்டிங்கர்(Sir Henry Pottinger), இலண்டனில் இருந்தபிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின்நெறியாளர் குழுவிடமிருந்து இதற்கான அனுமதியைப் பெற்றார். இந்த அருங்காட்சியகத்தின் முதல் பொறுப்பாளராக மருத்துவரானஎட்வார்ட் பல்ஃபர்(Edward Balfour) என்பவரை ஆளுனர் நியமித்தார். 1851 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அரசு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படுவது பற்றிய அரசு ஆணை முதன்முதலாக வெளியிடப்பட்டது. மதராசு கல்விக் கழகத்தின் 1100நிலவியல் மாதிரிகளுடன், கல்லூரிச் சாலையில் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை கல்லூரியின் முதலாம் மாடியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அருங்காட்சியகம் விரிவடைந்து வந்த நிலையில், அதன் கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், 1854 ஆம்ஆண்டில் இது பந்தியன் (Pantheon) என அழைக்கப்பட்ட இன்னொரு கட்டிடத்துக்கு இடம்மாற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக