ஞாயிறு, 17 டிசம்பர், 2017

உயர்தனிச் செம்மொழி

"திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி புகல் செம்மொழியாம்' என்பது இலக்கணம். இம் மொழி நூல் இலக்கணம் நம்முடைய தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட  சொல் முடிபுகளும் பொருள் முடிபு களும் இன்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதின் உணரவற்றாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்த மெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் மொழிக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற் படுமிடத்துப் பிறமொழி சொற்களன்றித் தன் சொற்களே மேற்கோடல் வேண்டும். இவையும் நம் உயர்தனித் தமிழ் மொழிக்கும் பொருந்துவனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக