செவ்வாய், 24 அக்டோபர், 2017

கு.காமராசர்

காமராசர்காமராசர்(காமராஜர்)தமிழ் நாட்டின்முன்னாள்முதலமைச்சர்களுள்ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதையசென்னை மாநிலமுதலமைச்சர்ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள்தமிழகத்தின் முதல்வராகப்பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குஇலவச மதிய உணவுத் திட்டத்தைஅறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை,தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர்என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு,1976இல் இந்திய அரசு இவருக்குப்பாரத ரத்னாவிருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு,மதுரை காமராசர் பல்கலைக்கழகம்என்றும்,சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்உள்நாட்டு முனையத்திற்குகாமராசர்பெயர் சூட்டப்பட்டுள்ளது.காமராஜர்மக்களவை உறுப்பினர், நாகர்கோவில்பதவியில்1967–1975முன்னவர்அ. நேசமணிபின்வந்தவர்குமரி அனந்தன்தொகுதிநாகர்கோவில்தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், சாத்தூர்பதவியில்1957–1967முன்னவர்ராமசாமி நாயுடுபின்வந்தவர்ராமசாமி நாயுடுதொகுதிசாத்தூர்தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், குடியாத்தம்பதவியில்1954–1957முன்னவர்ரத்னசாமி மற்றும் A. J. அருணாச்சல முதலியார்பின்வந்தவர்V. K. கோதண்டராமன்மற்றும்T. மணவாளன்தொகுதிகுடியாத்தம்முதலமைச்சர்சென்னை மாநிலம்(தமிழ் நாடு)பதவியில்1954–1963முன்னவர்சி. இராசகோபாலாச்சாரிபின்வந்தவர்எம். பக்தவத்சலம்மக்களவை உறுப்பினர், ஸ்ரீவில்லிபுத்தூர்பதவியில்1952–1954முன்னவர்Noneபின்வந்தவர்S. S. நடராசன்தொகுதிஸ்ரீவில்லிபுத்தூர்தலைவர்இந்திய தேசிய காங்கிரசுபதவியில்1967–1971முன்னவர்Noneபின்வந்தவர்மொரார்ஜி தேசாய்இந்திய தேசிய காங்கிரசுதலைவர்பதவியில்1963–1967முன்னவர்நீலம் சஞ்சீவ ரெட்டிபின்வந்தவர்எஸ். நிசலிங்கப்பாசென்னை மாகாணப் பிரதேச காங்கிரசு தலைவர்பதவியில்1946–1952பின்வந்தவர்ப. சுப்பராயன்தனிநபர் தகவல்பிறப்புகாமாட்சிசூலை 15,1903விருதுநகர்,தமிழ் நாடு,இந்தியாஇறப்பு2 அக்டோபர் 1975சென்னை,தமிழ் நாடு,இந்தியாதேசியம்இந்தியர்வாழ்க்கை துணைவர்(கள்)இல்லைபிள்ளைகள்இல்லைசமயம்இந்துஇக் கட்டுரையைக் கேட்கவும்(info/dl)இந்த ஒலிக்கோப்பு மார்ச் 30, 2013 தேதியிட்டகாமராசர்பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)பிற பேச்சுக் கட்டுரைகளைக் காணதொடக்ககால வாழ்க்கைகாமராசர்விருதுநகரில்1903 ஆம் ஆண்டு ஜூலை15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றேஅழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர்திருவனந்தபுரத்திலேமரக்கடை வைத்து நடத்திவந்தார்.சிறை வாழ்க்கையும் படிப்பும்பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும்போதுபெ. வரதராசுலு நாயுடுபோன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.ராசாசியின்தலைமையில்1930மார்ச்சு மாதம்,வேதாரண்யத்தில்உப்பு சத்தியாக்கிரகம்நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டுகல்கத்தாஅலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார்.விருதுநகர்வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர்பெ. வரதராசுலு நாயுடுவின்வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார்.1940இல் மீண்டும் கைதாகிவேலூர்சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதேவிருதுநகர்நகராட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பதுமாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்றமுடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல்ஆகத்து புரட்சிநடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள்தண்டனையாகப் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக