திங்கள், 23 அக்டோபர், 2017

சுரதா

கவிஞர் சுரதாசுரதா(நவம்பர் 23,1921-ஜூன் 19,2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர்பாரதிதாசனிடம்கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன்பெயரைசுப்புரத்தினதாசன்என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாகசுரதாஎன்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரைஉவமைக் கவிஞர்என்று சிறப்பித்துக் கூறுவர்.வாழ்க்கைக் குறிப்புசுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.தஞ்சை மாவட்டம்பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.பாரதிதாசனுடன் தொடர்பு1941சனவரி 14இல் பாவேந்தர்பாரதிதாசனைமுதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.கவிதை இயற்றல்சுரதாவின்சொல்லடாஎன்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம்தந்தை பெரியார்,கலைவாணர்முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம் பிள்ளைஇருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்ததலைவன்இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின்சிவாஜிஇதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக