வியாழன், 30 நவம்பர், 2017

இக்காலகவிதைகள்

இக்கால கவிதைகள்

பாரதியார்:

இந்திய ஒருமைப்பாட்டின் சிறப்பு

முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்- இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்
தமிழ் வளர்ச்சிக்கு வழிசொல்லும் மற்றொரு கவிதை:
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

பாரதிதாசன்:

விழிச்சியுற்ற தமிழர் எழுச்சிபெற:
           எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
           இங்குள்ள தமிழர்கள் ஒன்றாகுதல் கண்டே
பொதுமையுடைமையை
எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்

கவிமணி:

பெண்ணின் பெருமை
     மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
     மாதவம்செய்திட வேண்டுமம்மா
தொழிலும் தமிழும் வளம்பெற வேண்டும் என:
     சாலைகளில் பல தொழிகள் பெருகவேண்டும்
     சபைகளிலே தமிழெழுத்து முழங்கவேண்டும்

நாமக்கல் கவிஞர்:

தமிழரின் சிறப்பு:
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்
சமுதாயத்தின் மீது:
           பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
           பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்
தொழில் கற்க வேண்டும் என்று:
           கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
           கவலை உனக்கில்லை ஒத்துகொள்

முடியரசன்:

தண்டமிழ் காதலை வலியுறுத்தும் பாடல்:
ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்
அன்னைமொழி பேசுதற்கு நாணு கின்ற
தீங்கு உடைய மனப்போக்கர் வாழும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி ?

சுரதா:

உவமைக் கவிஞர் என்று போற்றபடுபவர்
முல்லைக்கோர் காடுபோலும்
     முத்துக்கோர் கடலேபோலும்
சொல்லுக்கோர் கீரன்போலும்
................
வல்லிகண்ணன்

ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்ற

இக்காலகவிதைகள்

மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கூக் கவிதை எனப் பல வகைகளில் கவிதை சிறக்கும் காலகட்டம் இது.

இவ்விலக்கியத்தின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை குறித்துப் படிப்பது, இனிப் படைப்பதற்கும் உதவியாகும் என்பதை நினைவிற் கொள்வோம்.

6.4.1 உருவம்
நொண்டிச் சிந்து, விருத்தம், புதுக்கவிதை, ஐக்கூ என்பனவாக இவற்றைக் காண்கிறோம்.

நொண்டிச் சிந்து
பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பாடல்களில் தனிச்சொல் பெற்றும், பெறாமலும் அமையும் நொண்டிச் சிந்துப் பாக்கள் எளிய சொல்லாட்சி கொண்டு இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.

சான்று :

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 
                                  (பாரதியார் கவிதைகள்)

விருத்தம்

பாரதியார் கவிதைகளில் காணும் அறுசீர் விருத்தம் ஒன்று :
இதம்தரு மனையின் நீங்கி
     இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதம்திரு இரண்டும் மாறிப்
     பழிமிகுத்து இழிவுற் றாலும்
விதம்தரு கோடி இன்னல்
     விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்தர தேவி நின்னைத்
     தொழுதிடல் மறக்கி லேனே

திங்கள், 27 நவம்பர், 2017

ஒய்வும் பயனும்

அறிவியல் ஆய்வு செய்வாய்.நீ   அன்றாடச் செய்தி படிப்பாய !      செறிவுறும்  உன்றன் அறிவு உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய்!

மருத்துவ நூல்கள் கற்பாய்  உடன்
    மனநூலும்  தேர்ந்து  கற்பாய் .!
திருத்தமெய்ந் நூல்கள்அறிவாய் வருந்
       தீமையும்  பொய்யும்  களைவய் !
                        ....பெருஞ்சித்திரனார்

ஞாயிறு, 26 நவம்பர், 2017

திருமந்திரம்


திருமந்திரம்
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு.[1] இது ஒன்பது தந்திரங்களைக் (இயல்கள்) கொண்டது. மூவாயிரம் பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களைக் கொண்டது. திருமந்திரம் எடுத்துக் கொண்ட பொருளை எளிய சொற்களால் அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைப்போல் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறது.

சனி, 25 நவம்பர், 2017

திருமந்திரம்

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்                                         உடம்பை வளர்க்கும் உபாயம்  அறிந்தே                                         உடம்பை வளர்த்தேன்  உயிர்வளர்த்    தேனே                                                         ......திருமூலர்

வெள்ளி, 24 நவம்பர், 2017

தேம்பாவணி

நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள்                          பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற                                முகைசெய் மேனி  தழுவிமுத் திட்டலுங்                                 குகைசெய் யின்பெழக் கோலமிட் டொத்ததே.                                  
                                  ...வீரமாமுனிவர்

வியாழன், 23 நவம்பர், 2017

நளவெண்பா


நளவெண்பா
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந் நூல் வெண்பாக்களால் அமைந்தது.

புதன், 22 நவம்பர், 2017

உலகளாவிய தமிழர்கள்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி - புறப்பொருள் வெண்பாமாலை
உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.
இருபது நாடுகளில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.
வாணிகம், வேலைவாய்ப்பு காரணமாகவே தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்று வந்தனர்.
இது குறித்து செய்தி சங்க இலக்கியங்களிலும் காணப்படுகிறது.
திரைகடலோடியும் திரவியம் தேடு என்றவர் - ஒளவையார்.
சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
ரியூனியன் தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே.
அவர்கள் பிரெஞ்சுகாரர்களால் ஒப்பந்தக் கூலிகளாக குடியர்தப்பட்டனர்
இலங்கையில் வாழும் தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆட்சிமொழியாகத் திகழ்கிறது.
தமிழர் இலங்கை ,சிங்கப்பூர் ,மலேசியா முதலிய நாடுகள் பலவற்றில் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றிபெற்று உறுப்பினர் , அமைச்சர் எனப் பல பதவிகள் வகித்து சிறப்பாக தொண்டாற்றி வருகின்றனர் .
இந்தியாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும் தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்கு பெருமை சேர்க்கிறது .
உலகெங்கும் அச்சு ஒலி, ஒளி ஊடகங்களை தமிழர் நடத்தி வருகின்றனர்

செவ்வாய், 21 நவம்பர், 2017

உமர்கய்யாம் பாடல்கள்


தேசிக விநாயகம் பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

கவிமணி .சி . தேசிக விநாயகம் பிள்ளை
பிறப்புஜூலை 27, 1876
தேரூர், கன்னியாக்குமரி மாவட்டம்
இறப்புசெப்டம்பர் 26, 1954 (அகவை 78)
அறியப்படுவதுகவிஞர்
பட்டம்கவிமணி
பெற்றோர்சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
வாழ்க்கைத் துணைஉமையம்மை

திங்கள், 20 நவம்பர், 2017

உமர்கய்யாம் பாடல்கள்

அன்பு செய்யின் அயலாரும்               அண்டி நெருங்கும் உறவினராம்    அன்பு நீங்கின்  உறவினரும்            அகன்று நிற்கும் அயலவராம்         துன்ப நோயை  நீக்கிடுமேல்         துவ்வா   விடமும் அமுதாகும்               துன்ப நோயை ஆக்கிடுமேல்           தூய அமுதம்  விடமாமே!

உமர்கய்யாம் பாடல்கள்

அன்பு செய்யின் அயலாரும்               அண்டி நெருங்கும் உறவினராம்    அன்பு நீங்கின்  உறவினரும்            அகன்று நிற்கும் அயலவராம்         துன்ப நோயை  நீக்கிடுமேல்         துவ்வா   விடமும் அமுதாகும்               துன்ப நோயை ஆக்கிடுமேல்           தூய அமுதம்  விடமாமே!

வெள்ளி, 17 நவம்பர், 2017

மணிமேகலை

நல்வினை  யென்பது யாதென வினவின்                                           சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்                                        சீலம் தாங்கித் தானம் தலைநின்று               மேலென வகுத்த ஒருமுன்றுதிறத்துத்                            தேவரும் மக்களும்  பிரமரு மாகி      மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்                                     சித்தலைச்சாத்தனார்

நாடகக்கலை

பம்மல் சம்பந்த முதலியார்பம்மல் சம்பந்த முதலியார்(1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.[1]பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார்பிறப்பு21 பிப்ரவரி 1873பம்மல்,தமிழ்நாடு,இந்தியாஇறப்புசெப்டம்பர் 24,1964கல்விபச்சையப்பா கல்லூரிபணிநாடகாசிரியர், நடிகர்வாழ்க்கைக் குறிப்புசென்னையில்பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 21 பிப்ரவரி 1873 அன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர்1924முதல்1928வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.நாடக எழுத்துப்பணிசிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார்.1891இல் பெல்லாரியிலிருந்து வந்தகிருஷ்ணமாச்சார்லுஎன்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில்,1891ஜூலை 1ஆம் நாள்,"சுகுண விலாச சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின்தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.

செவ்வாய், 14 நவம்பர், 2017

திருவள்ளுவமாலை

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட                                                   பனையளவு காட்டும் படித்தால்...மனையளதகு                      வள்ளைக்கு உறங்கும் வளநாட       வள்ளுவனார்                                         வெள்ளைக் குறட்பா விரி
                                         கபிலர்

திங்கள், 13 நவம்பர், 2017

இனியவை நாற்பது

இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, இலக்கியங்கள், கற்றல், மூன்று, நாற்பது, அதுபோல, இனியவை, கீழ்க்கணக்கு, முன்இனிதே, முன், பதினெண், இனிதாகும், மதிப்பு, அரசன், செய்யாமை, முன்இனிது, கொல்லாமை, வாழ்க்கை, மிகஇனிதே, பாடல்களில், கல்வி, சங்க, கூறியுள்ளார், தாங்கினிதே, துறத்தல், கொள்ளுதல், நன்கு

இனியவநைாற்பது ஆசிரியர்குறிப்பு

சனி, 11 நவம்பர், 2017

இனியவை நாற்பது

சலவரைச் சாரா விடுதல் இனிதே         புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்துமன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
                      

                          ...பூதஞ்சேந்தனார்

வியாழன், 9 நவம்பர், 2017

ஆகுபெயர்

தேம்பாவணி

தேம்பாவணிதேம்பாவணிஎன்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையானபுனித யோசேப்புமீது இயற்றப்பட்ட முதற் பெரும்செய்யுள்வகை நூலாகும். இந்நூல்இத்தாலியநாட்டவரானவீரமாமுனிவர்(1680-1742) அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது.கிறிஸ்தவசமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

புதன், 8 நவம்பர், 2017

கம்பராமாயணம்

கம்பராமாயணம் ஆசிரியர் குறிப்பு: பெயர் = கம்பர் ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர் தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன் மகன் = அம்பிகாபதி மகள் = காவிரி ஆசிரியரின் சிறப்பு பெயர்: கவிச்சக்ரவர்த்தி கவிப்பேரரசர் கவிக்கோமான் கம்பநாடுடைய வள்ளல் 󾔂இவரின் படைப்புகள்: ஏர் எழுபது சிலை எழுபது திருக்கை வழக்கம் சரஸ்வதி அந்தாதி சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது) கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்: கம்பசித்திரம் கம்பநாடகம் தோமறுமாக்கதை ⏫இயற்கை பரிணாமம் நூல் அமைப்பு: காண்டம் = 6படலம் = 113 மொத்த பாடல்கள் = 10569 முதல் படலம் = ஆற்றுப்படலம் இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம் காண்டங்கள்: பால காண்டம் அயோத்தியாகாண்டம் ஆரண்யகாண்டம் கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் யுத்தகாண்டம் ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”

கம்பராமாயணம்

கம்பராமாயணம் ஆசிரியர் குறிப்பு: பெயர் = கம்பர் ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர் தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன் மகன் = அம்பிகாபதி மகள் = காவிரி ஆசிரியரின் சிறப்பு பெயர்: கவிச்சக்ரவர்த்தி கவிப்பேரரசர் கவிக்கோமான் கம்பநாடுடைய வள்ளல் 󾔂இவரின் படைப்புகள்: ஏர் எழுபது சிலை எழுபது திருக்கை வழக்கம் சரஸ்வதி அந்தாதி சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது) கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்: கம்பசித்திரம் கம்பநாடகம் தோமறுமாக்கதை ⏫இயற்கை பரிணாமம் நூல் அமைப்பு: காண்டம் = 6படலம் = 113 மொத்த பாடல்கள் = 10569 முதல் படலம் = ஆற்றுப்படலம் இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம் காண்டங்கள்: பால காண்டம் அயோத்தியாகாண்டம் ஆரண்யகாண்டம் கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் யுத்தகாண்டம் ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”

ஞாயிறு, 5 நவம்பர், 2017

உணவே மருந்து

உணவே மருந்துஉணவேமருந்துமருந்தேஉணவுஎன்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்து தான் நாகரீகமாக இருந்தாலும் அல்லது உணவு கலாச்சாரமாக இருந்தாலும் உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது.சங்க கால இலக்கியங்கள்எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,கலித்தொகைஎன சங்ககால இலக்கியங்களில்[1]உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வு தமிழர்களுக்கிடையே இருந்தது. தமிழர்கள் உணவே மருந்து ,மருந்தே உணவு என்ற கொள்கையில் முழுமையாக வாழ்ந்தார்கள்.தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுதுசிறுதானியங்கள்என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பிரதானமானதுவரகு,திணை,குதிரைவாலி,சாமை.இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சுழலில் வாழ்ந்துள்ளார்கள்.அறிஞர்கள் கருத்துபல்வேறுமூலிகைகள்,காய்கனிகள்,கீரைகள்,அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்க்கே இடமில்லை.உணவே பிரம்மன்,உணவிலிருந்தே எல்லா உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு எனஉபநிடதங்கள்கூறுவதை வள்ளுவரும்[2],ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோரும் கூறியது உணவில்லையேல் வாழ்கையே அழியும் என்பதைத் தான் காட்டியுள்ளது.

சனி, 4 நவம்பர், 2017

நாடகக்கலை

பம்மல் சம்பந்த முதலியார்(1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.

வெள்ளி, 3 நவம்பர், 2017

மணிமேகலை

மணிமேகலை (காப்பியம்)இலக்கியம்இதே பெயரில்1940இல் வெளிவந்த திரைப்படம் பற்றிய தகவலுக்குமணிமேகலைகட்டுரையைப் பார்க்க.மணிமேகலைஐம்பெரும்தமிழ்காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர்சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலைகாப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.[1]கதைசிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலைசெய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின்உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞானஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள்.[2]கதாப்பாத்திரங்கள்மணிமேகலை- கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாகவேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தும், மணிமேகலை அனைத்துத் தடைக்கற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தாள். பிறகு தன் விருப்பப்படியே புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கோவலன் இரத்தத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்த வீரம் மணிமேகலையிடம் இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாதவியைப் போல் மணிமேகலையிடம் அளவற்ற பண்புகள் இருந்தமையால்தான், தனது தாயார், ஆசான் மற்றும் ஞானபிதாவின் பேச்சை மதித்து நடக்கிறாள். இக்காப்பியமே மணிமேகலை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை மூலமாகக் கொண்டு அமைந்துள்ளது.உதயகுமரன்- சோழ மன்னன், மணிமேகலையின் மீது முட்டாள் தனமான மோகம் கொண்டவன். நினைத்ததை அடையவேண்டும் என்ற குணம் படைத்தவன். ஆசை இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ஆசை இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை உதயகுமரன் கதாப்பாத்திரம் காட்டியுள்ளது. மணிமேகலையின் மேல் காதல்கொண்ட உதயகுமரன் அவளது துறவியாக வேண்டும் என்ற ஆசையை அறிந்தும் கூட அவளைப் பின்தொடர்ந்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், கஞ்சணன் என்பவன் உதயகுமாரனைக் கொலை செய்துவிட்டான்.சுதமதி- மணிமேகலையின் நம்பகமான தோழி. மணிமேகலையை மணிபல்லவத்தில் விட்டு, அவளை ஆன்மீகப் பாதையில் செலுத்தியதை மேகலையின் தாயாரிடம் கூடக் கூறாமல், சுதமதியின் கனவிலேயே முதலில் தோன்றி நடந்ததை கூறினாள்,கடலின் கடவுள் மணிமேகலா. இது சுதமதியின் மேல் மணிமேகலா வைத்திருக்கும் நம்பிக்கையைகாட்டுகிறது. இக்காப்பியத்திலேயே மணிமேகலையின் ஒரே தோழி சுதமதிதான். அக்காலக்கட்டங்களில் நண்பர்களுக்கெல்லாம்ஒரு இலக்கணமாக அமைந்தவள் சுதமதி. அவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உண்டு.இயற்றப்பட்ட காலம்மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களே இருந்து வருகின்றன.1. நாகார்ச்சுனர் (கி. பி 3 ஆம் நூற்றாண்டு) பின்பற்றியது மகாயான பௌத்த மதக் கொள்கை கருத்துகள் உடையது. ஆனால் மணி மேகலை ஹீனயான பௌத்த மதக் கொள்கை கருத்துகள் உடையது .2. ஹீனயான பௌத்த மதக் கொள்கை கி.மு 220 கு பிறகு தமிழகத்தில் நுழைந்து இருக்கும். ஆனால் சங்க காலம் நிலை பெற்ற அக்காலத்தில் ஆசிவகமும் , சமணமும் கோலோச்சி இருந்ததால் ஹீனயான பௌத்த மதக் கொள்கை ஏற்க்கப்படவில்லை. சங்கம் மருவிய காலத்தில் தான் அவை ஏற்க்கப்படுகின்றன.3. பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளை சிலப்பதிகாரம் மற்றும் மணி மேகலை பற்றி கூறிய அனைத்து கருத்துகளையும் சான்றுகளுடன் மறுத்து கூறியுள்ளார் தன் கால ஆராய்ச்சி என்ற நூலில் மா. இராச மாணிக்கனார்.4. இறுதியாக கிருதகோடி ஆசிரியர் பற்றி குறிப்பிடும் மணி மேகலை கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது என்ற முடிவுக்கு வருகிறார் தன் கால ஆராய்ச்சி எனும் நூலில் மா. இரா மாணிக்கனார்.5. குஷான வம்சத்தின் சிறந்த அரசர் கனிஷ்கர் அரியனை ஏரிய காலம் கி. பி 78 . இவருடைய காலத்தில் ஹீனயானத்தில் இருந்து மகாயானம் உருவாக்கப்படுகிறது .6. சிலப்பதிகாரமும் மணி மேகலையும் வெவ்வேறுகாலங்களில் எழுதப்பட்டது என சான்றுடன் பல நூல்களில் பல தமிழ் ஆர்வளர்கள் விளக்கியுள்ளனர். இறுதியாக 200 - 225 வருட இடைவெளியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனமுடிவு செய்கின்றனர்.7. சங்க கால புலவர் மாமூலனார் கி. மு 4 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர் என கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி குறிப்புகள்மூலம் தற்காலத்தில் பல தமிழ் ஆர்வளர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது .8. மாமூலனார் கால த்தின் மூலம் கணக்கிடுகையில் மணி மேகலை எழுதி முடிக்கப்பட்ட காலம் கி. பி முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம் ஆகும். இக் காலத்தையே மா. இராச மாணிக்கனார் காலமும் குறிப்பிடுகிறது . கனிஷ்கர் காலமும் இதனை உறுதி செய்கிறது. ஆக மாமூலனார் காலமும் சரியானதே என உறுதியாகிறது .மணிமேகலையில் சமயநெறிகி. மு. ஆறாம் நூற்றாண்டில் பௌத்த, சமணச் சமயங்கள் தோன்றின. அதற்குப் பின்னர் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவியசமயங்களைப் பற்றிய செய்தி சமயநெறி விளக்கத்துடன் தெளிவாகத் தெரியவருகின்றன.[3]'சமயம்' என்னும் சொல் சங்கப் பாடல்களில் இல்லை.தெய்வம்என்னும் சொல் உள்ளது. சமயம் என்னும் சொல் சிலப்பதிகாரத்திலும் இல்லை. பண்டைய நூல்களில் மணிமேகலை, பழமொழி ஆகியவற்றில் மட்டும் வருகிறது. புத்த மதம் கி. மு. 527-லும், சமண மதம் கி. மு. 527-லும் தோன்றின. இவை இரண்டும் ஏறத்தாழ சமகாலம் என்றாலும் புத்தர் துறவு 17 ஆண்டுகள் முந்தியது எனத் தெரிகிறது.சிலப்பதிகார காலத்தை வானியல் நெறியில் கணித்த நெறி துல்லியமாயினும், அவர் கொண்ட பாடத்தில் பிழை நேர வாய்ப்பு உண்டு. மேலும் அக்காலப் பல்லவர்கள் பற்றிய கருத்து இரட்டைக் காப்பியங்களில் இல்லை. எனவே ஒப்புமை வரலாற்றோடு பொருத்திக் கணிக்கப்பட்ட கயவாகு மன்னனின் கி. பி. 117 கண்ணகிக்குக் கல் நட்ட காலம் என்றும், அடுத்த வாழ்நாள் காலம் மணிமேகலை காலம் என்றும், இளங்கோவின் சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்றும் தெளிவாக உணரமுடிகிறது.மணிமேகலை சேரநாட்டு வஞ்சிமாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு அவர்தம் திறம் (கோட்பாடு) பற்றிக் கேட்டறிந்தாள். அவள் பின்பற்றியது பௌத்த சமயம். ஆக கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் நிலவிய சமயங்கள் பத்து எனத் தெரியவருகிறது.