மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கூக் கவிதை எனப் பல வகைகளில் கவிதை சிறக்கும் காலகட்டம் இது.
இவ்விலக்கியத்தின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை குறித்துப் படிப்பது, இனிப் படைப்பதற்கும் உதவியாகும் என்பதை நினைவிற் கொள்வோம்.
6.4.1 உருவம்
நொண்டிச் சிந்து, விருத்தம், புதுக்கவிதை, ஐக்கூ என்பனவாக இவற்றைக் காண்கிறோம்.
நொண்டிச் சிந்து
பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பாடல்களில் தனிச்சொல் பெற்றும், பெறாமலும் அமையும் நொண்டிச் சிந்துப் பாக்கள் எளிய சொல்லாட்சி கொண்டு இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.
சான்று :
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
(பாரதியார் கவிதைகள்)
விருத்தம்
பாரதியார் கவிதைகளில் காணும் அறுசீர் விருத்தம் ஒன்று :
இதம்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதம்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத்து இழிவுற் றாலும்
விதம்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்தர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக