வியாழன், 30 நவம்பர், 2017

இக்காலகவிதைகள்

இக்கால கவிதைகள்

பாரதியார்:

இந்திய ஒருமைப்பாட்டின் சிறப்பு

முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்- இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்
தமிழ் வளர்ச்சிக்கு வழிசொல்லும் மற்றொரு கவிதை:
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

பாரதிதாசன்:

விழிச்சியுற்ற தமிழர் எழுச்சிபெற:
           எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
           இங்குள்ள தமிழர்கள் ஒன்றாகுதல் கண்டே
பொதுமையுடைமையை
எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்

கவிமணி:

பெண்ணின் பெருமை
     மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
     மாதவம்செய்திட வேண்டுமம்மா
தொழிலும் தமிழும் வளம்பெற வேண்டும் என:
     சாலைகளில் பல தொழிகள் பெருகவேண்டும்
     சபைகளிலே தமிழெழுத்து முழங்கவேண்டும்

நாமக்கல் கவிஞர்:

தமிழரின் சிறப்பு:
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்
சமுதாயத்தின் மீது:
           பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
           பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்
தொழில் கற்க வேண்டும் என்று:
           கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
           கவலை உனக்கில்லை ஒத்துகொள்

முடியரசன்:

தண்டமிழ் காதலை வலியுறுத்தும் பாடல்:
ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்
அன்னைமொழி பேசுதற்கு நாணு கின்ற
தீங்கு உடைய மனப்போக்கர் வாழும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி ?

சுரதா:

உவமைக் கவிஞர் என்று போற்றபடுபவர்
முல்லைக்கோர் காடுபோலும்
     முத்துக்கோர் கடலேபோலும்
சொல்லுக்கோர் கீரன்போலும்
................
வல்லிகண்ணன்

ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்ற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக