கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி - புறப்பொருள் வெண்பாமாலை
உலகில் உள்ள 235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர்.
இருபது நாடுகளில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.
வாணிகம், வேலைவாய்ப்பு காரணமாகவே தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்று வந்தனர்.
இது குறித்து செய்தி சங்க இலக்கியங்களிலும் காணப்படுகிறது.
திரைகடலோடியும் திரவியம் தேடு என்றவர் - ஒளவையார்.
சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
ரியூனியன் தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே.
அவர்கள் பிரெஞ்சுகாரர்களால் ஒப்பந்தக் கூலிகளாக குடியர்தப்பட்டனர்
இலங்கையில் வாழும் தமிழர்களில் 95 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆட்சிமொழியாகத் திகழ்கிறது.
தமிழர் இலங்கை ,சிங்கப்பூர் ,மலேசியா முதலிய நாடுகள் பலவற்றில் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றிபெற்று உறுப்பினர் , அமைச்சர் எனப் பல பதவிகள் வகித்து சிறப்பாக தொண்டாற்றி வருகின்றனர் .
இந்தியாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும் தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்கு பெருமை சேர்க்கிறது .
உலகெங்கும் அச்சு ஒலி, ஒளி ஊடகங்களை தமிழர் நடத்தி வருகின்றனர்
புதன், 22 நவம்பர், 2017
உலகளாவிய தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக