சனி, 20 ஜனவரி, 2018
காந்தியம்
புறப்பொருள் தினைகள்
புறப்பொருள் திணைகள்துணைப் பகுப்புகள்இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன. ►வஞ்சித் திணையின் துறைகள்(20 பக்.) ►வெட்சித் திணையின் துறைகள்(4 பக்.)"புறப்பொருள் திணைகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன *.உழிஞைத் திணைக *.கரந்தைத் திணை * .காஞ்சித் திணை *.தும்பைத் திணை *.நொச்சித் திணைப *.பாடாண் திணை *.பொதுவியல் திணை *.வஞ்சித் திணை *.வாகைத் திணை *.வெட்சித்தனை *.வெட்சித்துறைகள
புறப்பொருள்
புறப்பொருள்வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும்தொல்காப்பியம்என்னும்பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும்.புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள் என்னும் நூலின் தலைப்புகளும் புறப்பொருள் அகப்பொருள் என்னும் பாகுபாடுகளையே குறிப்பிடுகின்றன.பழந் தமிழர் வாழ்வியலில்போர்,அரசியல்முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம்புறப்பொருள்என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும்இலக்கியங்களைப்புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவதுதமிழ் இலக்கியமரபு.புறத்திணைப் பிரிவுகள்புறப்பொருளில் உள்ள துறைப் பிரிவுகளைத்தொல்காப்பியர்ஏழுஎனக் காட்டுகிறார்.புறப்பொருள் வெண்பாமாலை12 எனப் பகுத்துக் காட்டுகிறது.தொல்காப்பிய நெறிபண்டைத்தமிழ் இலக்கணநூலானதொல்காப்பியம்அதன் பொருளதிகாரத்தில் அகப்பொருளில் உள்ள திணைகள், புறப்பொருளில் உள்ள திணைகள் பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.1.வெட்சித் திணை2.வஞ்சித் திணை3.உழிஞைத் திணை4.தும்பைத் திணை5.வாகைத் திணை6.காஞ்சித் திணை7.பாடாண் திணைஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந்நாட்டுஎல்லையூடுபுகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறுகளவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டுவருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீதுபடைநடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக்கோட்டையைமுற்றுகை இடுவதையும், அக்கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர்செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான பொருள்களை விளக்குவது காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன.புறப்பொருள் வெண்பாமாலை நெறிவெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.
புறப்பொருள்
புறப்பொருள்வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும்தொல்காப்பியம்என்னும்பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும்.புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள் என்னும் நூலின் தலைப்புகளும் புறப்பொருள் அகப்பொருள் என்னும் பாகுபாடுகளையே குறிப்பிடுகின்றன.பழந் தமிழர் வாழ்வியலில்போர்,அரசியல்முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம்புறப்பொருள்என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும்இலக்கியங்களைப்புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவதுதமிழ் இலக்கியமரபு.புறத்திணைப் பிரிவுகள்புறப்பொருளில் உள்ள துறைப் பிரிவுகளைத்தொல்காப்பியர்ஏழுஎனக் காட்டுகிறார்.புறப்பொருள் வெண்பாமாலை12 எனப் பகுத்துக் காட்டுகிறது.தொல்காப்பிய நெறிபண்டைத்தமிழ் இலக்கணநூலானதொல்காப்பியம்அதன் பொருளதிகாரத்தில் அகப்பொருளில் உள்ள திணைகள், புறப்பொருளில் உள்ள திணைகள் பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.1.வெட்சித் திணை2.வஞ்சித் திணை3.உழிஞைத் திணை4.தும்பைத் திணை5.வாகைத் திணை6.காஞ்சித் திணை7.பாடாண் திணைஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந்நாட்டுஎல்லையூடுபுகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறுகளவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டுவருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீதுபடைநடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக்கோட்டையைமுற்றுகை இடுவதையும், அக்கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர்செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான பொருள்களை விளக்குவது காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன.புறப்பொருள் வெண்பாமாலை நெறிவெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.
நந்திக் கலம்பகம்
நந்திக் கலம்பகம்இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது.நந்திக் கலம்பகம்தமிழில் உருவானகலம்பகஇலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்தமூன்றாம் நந்திவர்மன்குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மல்லை (மாமல்லபுரம்), மயிலை( மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.
குலசேகர ஆழ்வார் குறிப்பு
நாலாயிரத் திவ்வியபிரபந்தம்பொய்கையாழ்வார்பூதத்தாழ்வார்பேயாழ்வார்திருமழிசையாழ்வார்நம்மாழ்வார்மதுரகவியாழ்வார்பெரியாழ்வார்ஆண்டாள்திருமங்கையாழ்வார்தொண்டரடிப்பொடி ஆழ்வார்திருப்பாணாழ்வார்குலசேகர ஆழ்வார்குலசேகர ஆழ்வார்குறிப்பு:*.இவர் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.*.இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.*.அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.*.இவர் கௌத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர்*.இவர் வடமொழியில் “முகுந்த மாலை” என்னும் நூலினை எழுதியுள்ளார்*.இவர் இராமனுக்கு தாலாட்டுபாடியவர்*.ஒவ்வொரு வைணவத் திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன்படி” என்ற பெயரில் வழங்கப்படும்*.திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர்கட்டினார்வேறு பெயர்கள்:*.கொல்லிக் காவலன்*.கூடல் நாயகன்*.கோழிக்கோபடைப்பு:*.பெருமாள் திருமொழிமேற்கோள்:*.ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழவானாளுஞ் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்மீனாய்ப் பிறக்கும் விதியுடைய னாவேனே*.மீன்னோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேன
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
நாலாயிர திவ்விய பிரபந்தம்பெருமாளைகுறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இதுஇந்துமதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள்வைணவசமயத்தில்ஆழ்வார்கள்12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தநாதமுனிகள்என்பார் ஆழ்வார்கள்அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு,திருவரங்கத்தமுதனார்செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல்தொகுப்பினையும் குறிக்கும்.இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பதுஇதன் சிறப்பு. இது,முதலாயிரம்-----------947 பாடல்கள்பெரிய திருமொழி----1134 பாடல்கள்திருவாய்மொழி------1102 பாடல்கள்இயற்பா---------------817பாடல்கள்என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நூலகத்தின் பயன்கள்
நூலகத்தின் பயன்கள்
நூலகம் அறிவை வளர்க்கும்ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும் நூலகங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும்.அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம
நிற்க நேரமில்லை
இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழிஎன்னென்ன வாகுமோ ஓரிரவில்சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பிதேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே!சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்குநல்லசெடி இளைப் பாறிடுமோ?வேதனை யாவும் மறந்ததுபார் – செடிவெற்றி கொண்டேந்திய பூவினிலே-
சாலை இளந்திரையன்
சொற்பொருள்:*.செத்தை – குப்பைகூளம்*.இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்
ஆசிரியர் குறிப்பு:*.சாலை. இளந்திரையனின் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி.*.இவர் திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல் என்னும் இடத்தில் பிறந்தார்.*.தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாரக இருந்தார்.*.உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ்எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்.*.1991இல் “பாவேந்தர் விருதினை” பெற்றவர்.*.காலம் - 06.09.1930 – 04.10.1998.நூல் குறிப்பு:*.இப்பாடல்“பூத்தது மானுடம்”என்னும் கவிதைத் தொகுப்பில் உள்ளது*.மேலும் இவர் புரட்சி முழக்கம், உரை வீச்சு போன்ற நூல்களை படைத்துள்ளார்.
பல்துறை வேலைவாய்ப்புக்கள்
*.வினையே ஆடவர்க்குயிர், என்கிறது குறுந்தொகை.*.“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்கிறது தொல்காப்பியம்.*.சங்க காலத்தில் பொருளீட்டுவோர் ஆண்களே எனவும், பெண்கள் குடும்பத்தினை பொறுப்புடன் நடத்தவேண்டும் எனவும், பெண்கள் கடல்கடந்து செல்லககூடாதெனவும் கூறி வந்தனர்.*.நாள்தோறும் கல்வியில் புதுப்புதுத் துறைகள் உருவாகிககொண்டேவருகின்;றன.இராணுவம், காவல் துறைப் பணி:*.பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இராணுவம், காவல் முதலிய துறைகளில் சேர்வதற்கும் வாய்ப்புண்டு. இவற்றில் சேர முதலில் உடற்கூறு தேர்வு நடைபெறும்.*.உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனேஎன்னும் திருமுலர் வாக்குப்படிமுறையாக உடற்பயிற்சி செய்தவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற இயலும்.*.அதன் பிறகு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே, பணியில சேர இயலும்.*.ஓட்டுநர், நடத்துநர் முதலான பணிகளுக்கும் உடற்கூறு தகுதியுடையவர்கள் மட்டுமே சேர இயலும்.*.மக்கள் நலப்பணியாளர், சத்துணவு அனமப்பாளர் போன்ற பணிகளிலும் சேரலாம். இப்பணிகள் குறித்த தகவல்கள்அவ்வப்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்மூலம் ஊடகங்களில் வெளியிடப்படும்.“வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்”- கவிஞர் தாரா பாரதியின் பாடல
நூலகத்தின் தோற்றம்
சுமார் 3 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு அசிரியப் பேரரசின் நிர்வாகத் துறையில் ஏற்பட்ட குழப்பங்களை சென்னாசெர்ப் என்ற அரசர் நீக்க விரும்பினார். அரசாங்கத்தினர் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில்எழுதி, சூளைகளில் சுட்டுக் காயவைத்து பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படி ஆணையிட்டார்.மன்னரின் ஆணையையடுத்து, அரசாங்க ஒப்பந்தங்கள், கடிதங்கள், ஆணைகள், உளவு அறிக்கைகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் களிமண் தகடுகளில் எழுதப்பட்டன. பின்னர், சூளைகளில் சுட்டுஅரசாங்கக் கருவூலங்களிலும், கோவில் கருவறைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் மருத்துவக் குறிப்புகள், சமய நூல்களும் பாதுகாக்கப்பட்டன.அசிரியப் பேரரசின் கடைசி மன்னர் அகர்பானிபல் (கி.மு.700 _ கி.மு.600) ஆட்சியின்-போது, களிமண் தகடுகள் 30 ஆயிரத்திற்கும் அதிகமாகின. வெவ்வேறு இடங்களில் வைத்துப் பாதுகாப்பது மிகவும் கடினமாக இருந்தது.எனவே, அசிரியாவின் தலைநகரான (தற்போதைய ஈராக்) நினிவெக் (Nineveh) (தற்போது மோசுல்) என்னுமிடத்தில் அனைத்தையும் துறைவாரியாகப் பிரித்து அடுக்கி வைக்க மன்னர் ஆணையிட்டார். மன்னரின் ஆணைப்படி,துறைவாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டது.இதுவே உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் ஆகும். இந்த நூலகம் தி ராயல் லைப்ரரி ஆஃப் அஸ்குர்பனிபல் (The Royal Library of Ashurbanipal) என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
வெள்ளி, 19 ஜனவரி, 2018
கற்றல் குறைபாடு
கற்றல் குறைபாடு என்றால் என்ன?கற்றல் குறைபாடு என்பது நரம்பியல் சார்ந்த ஒரு நிலை, இது மூளை விவரங்களை அனுப்புகிற, பெறுகிற மற்றும் புரிந்துகொள்கிற திறனைப் பாதிக்கிறது. கற்றல் குறைபாடுகொண்ட ஒரு குழந்தை வாசிப்பதற்கு, எழுதுவதற்கு, பேசுவதற்கு, கவனிப்பதற்கு, கணிதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு மற்றும் பொதுவாகவே எதையும் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படக்கூடும். கற்றல் குறைபாடுகள் என்ற வகையின் கீழ் பலவிதமான குறைபாடுகள் உள்ளன, உதாரணமாக டிஸ்லெக்ஸியா, டிஸ்பிராக்ஸியா, டிஸ்கால்குலியா மற்றும் டிஸ்கிராபியா. இந்தக் குறைபாடுகள் ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் இணைந்து காணப்படலாம்.குறிப்பு:கற்றல் குறைபாடுகள்உடல் சார்ந்த நோய்களாலோ மன நோய்களாலோ பொருளாதார நிலை அல்லது கலாச்சாரப் பின்னணியினாலோ உண்டாவதில்லை; கற்றல் குறைபாடு உள்ள ஒரு குழந்தை பலவீனமாக அல்லது சோம்பேறித்தனமாக உள்ளது என்று அர்த்தமில்லை.கற்றல் குறைபாடுகளின் வரையறைஅமெரிக்க அரசாங்கம் தனது 94-142 பொதுச் சட்டத்தில் வழங்கியுள்ள கற்றல் குறைபாடுகளுக்கான வரையறையை இந்தியா ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறது:“குறிப்பிட்ட கற்றல் குறைபாடு என்பது பேசுகிற அல்லது எழுதுகிற மொழியைப் புரிந்துகொள்ளுதல் அல்லது பயன்படுத்துதல் ஆகியவற்றுக்குத் தேவைப்படும்அடிப்படை உளவியல் செயல்முறைகள் ஒன்றிலோ பலவற்றிலோ ஏற்படும் குறைபாடு ஆகும். இது ஒருவர் கவனித்தல், பேசுதல், வாசித்தல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது கணக்குப் போடுதல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.இந்தச் சொல்லினால் குறிப்பிடப்படும் நிலைகள்: புலனுணர்வில் ஊனங்கள், மூளைக்காயம், மூளையின் குறைந்த பட்சச் செயலின்மை, டிஸ்லெக்ஸியா மற்றும் வளர்ச்சியின்போது பேச்சிழத்தல் ஆகியவை.இந்தச் சொல் பார்வைக் குறைபாடுகள், கேட்டல் குறைபாடுகள் அல்லது இயக்கவியல் குறைபாடுகள் அல்லது மனச் சிதைவு, உணர்வு தொந்தரவுகள் அல்லது சுற்றுச் சூழல் அல்லது கலாச்சார, பொருளாதார ஏழைமை ஆகியவற்றின் காரணமாகக் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் குறிப்பிடுவதல்ல.”
அனைவருக்கும் கல்வி
இந்திய அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளவாறு, பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி வழங்குவதை உறுதி செய்திட மக்கள் இயக்கமென உருவெடுத்த திட்டமே அனைவருக்கும் கல்வித்திட்டமாகும். இத்திட்டம்வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமூக, பொருளாதார, பாகுபாடின்மை, ஆண்,பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்வதற்கான அணுகுமுறைகளைக் கொண்டதாகும். அதிகாரப்பரவல் மூலமாக உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பங்களிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு ஏற்ற வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மக்களே முனைந்து நின்றுதங்கள் சொந்த நடவடிக்கையாக ஏற்று நடத்துவதால், இது “அனைவருக்கும் கல்வி இயக்கம்” என அழைக்கப்படுகிறது.திட்டக் குறிக்கோள்கள்*.பள்ளிவயதிலுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல்.*.பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைவரையும் எட்டாம் வகுப்பை வெற்றிகரமாக முடிக்கச் செய்தல்.*.அனைவருக்கும் வாழ்க்கைக்கு உகந்த தரமான கல்வியை உறுதி செய்தல்.*.சமூக, பொருளாதார அடிப்படையிலோ, ஆண், பெண் இன வேறுபாட்டினாலோ மாணவர்களின் சேர்க்கை, இடைநிறுத்தம், தொடர்ந்து படித்தல், கற்றலடைவு ஆகியவற்றில் ஏற்படும் இடைவெளியை முற்றிலுமாகக்களைதல்.*.பள்ளியில் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் இடைநிறுத்தமின்றிப் பள்ளிகளில் தக்கவைத்தல்.திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்பதினான்கு வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டம்.1.அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை உறுதியுடன் நிறைவேற்றும் திட்டம்.2.அடிப்படைக்கல்வியின் வாயிலாகச் சமூகநீதியை வளர்க்க வாய்ப்பளிக்கும் திட்டம்.3.ஊராட்சி மன்றம், கிராமக் கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்ற அமைப்புக்களை, ஆரம்பக் கல்வி நிர்வாகத்தில் ஈடுபடச் செய்யும் திட்டம்.4.அனைவருக்கும் கல்வி வழங்குவதில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் திட்டம்.5.மைய, மாநிலமற்றும் உள்ளாட்சிநிர்வாகங்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் திட்டம்.6.ஆரம்பக்கல்வி பற்றிய மாநில அரசின் தொலை நோக்குக் குறிக்கோள்களை இலக்கிட்டு காலவரம்புக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட
அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய கல்வி
நாட்டில் மக்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு மனித ஆற்றல் மூலதனத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.அதே போல் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டின் அவசியத்தையும் 2015-16 பொருளாதார அறிக்கை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து பொருளாதார ஆய்வறிக்கை கூறியிருப்பதாவது:சமூக கட்டமைப்பில் கல்வி, சுகாதார சேவை, வீட்டு வசதி ஆகியவற்றை பெறுவதில் உள்ள இடைவெளியை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கல்வி பயன்பாடு, மேம்பட்ட சுகாதார இலக்கு ஆகியவற்றில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.மக்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு மனித ஆற்றல் மூலதன முதலீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம்என்று 2015-16-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. கல்வி,சுகாதாரம், சமூகபாதுகாப்பு, ஊட்டச்சத்து, ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற சமூக சேவைகளுக்கான மொத்த செலவினம்2014-15-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏழு சதவீதமாக உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. 2013-14-ம் ஆண்டு இது 6.5 சதவீதமாகும்.கல்வித்துறையில் தனியார் மற்றும் பொதுத்துறை பள்ளிகளில் வாசிப்புத் திறன்நிலைமை குறைந்திருப்பது கல்வி பயன்பாட்டில் இறக்கம் காணப்படுவதை பிரதிபலிக்கிறது. 2007 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிப்பதில் 2007-ம் ஆண்டிலிருந்த திறன் 2014-ம் ஆண்டு கடும் வீழ்ச்சியடைந்திருப்பதாக 2014-ம் ஆண்டுக்கான கல்வி நிலைமை பற்றிய ஆண்டறிக்கை கூறுகிறது.பெண்கள் கல்வியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அநேகமாக, கல்வியின் எல்லா நிலையிலும் மாணவ-மாணவியருக்கு இடையில் சமநிலை எட்டப்பட்டுள்ளது. ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் போன்ற விளிம்பு நிலை மற்றும்வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கல்வியளிப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.பெண்கள் கல்வியில் குறைந்த செயல்பாடு உள்ள பகுதிகளை கண்டறிய உதவும் வகையில் பெண்கள் கல்வி பற்றிய வரைபடம் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. பள்ளியில் சேருவதையும், கற்கும் நிலையை மேம்படுத்துவதையும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித் தொகை திட்டங்களுக்கென தேசிய உதவித் தொகை இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது