புதன், 17 ஜனவரி, 2018

நளவெண்பா

சுயம்வர காண்டம்          இருளின் மிகுதியும் தமயந்தியின்துயரமும்          111. அள்ளிக் கொளலா யடையத் திரண்டொன்றாய்க்கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் - உள்ளம்புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்இதயமே போன்ற திரா.              
112. ஊக்கிய சொல்ல ரொலிக்குந் துடிக்குரலர்வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்கஇடையாமங் காவலர்கள் போந்தா ரிருளில்புடைவா யிருள்புடைத்தாற் போன்று.  

113. சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு - காமன்தன்பூவாளி ஐந்தும் புகத்துயில் புக்கதேஓவாது முந்நீ ருலகு.      
                             
114. ஊன்தின் றுவகையா லுள்ள வுயிர்புறம்பேதோன்றுங் கழுதுந் துயின்றதே - தான்தன்உரைசோரச் சோர வுடல்சோர வாயின்இரைசோரக் கைசோர நின்று. 
                                                 115. அன்றிலொருகண் துயின் றொருகண் ணார்வத்தால்இன்றுணைமேல் வைத்துறங்கு மென்னுஞ்சொல் - இன்றுதவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதேஅவிழ்ந்ததே கண்ணீ ரவட்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக