யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும்செய்யுள்என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம்யாப்பிலக்கணமாகும். யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.யாப்பின் உறுப்புகள்யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை1.எழுத்து2.அசை3.சீர்4.தளை5.அடி6.தொடைஉயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம்ஒலிஅளவுகளைப் பொருத்துகுறில்அல்லதுநெடில்என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர்.நேரசை,நிரையசைஈரசைகளாவன. குறிலோ நெடிலோதனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டுசீர்எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால்தளைகள்உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும். அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுறதொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக