1 சொல் வகைதமிழில் சொற்கள் நான்கு வகைப்படும்.அவை,1) பெயர்ச்சொல்2) வினைச்சொல்3) இடைச்சொல்4) உரிச்சொல்(எடு.)மலை-பெயர்ச்சொல்சென்றான்-வினைச்சொல்ஐ-இடைச்சொல்மா-உரிச்சொல்சொற்களை இயல்பும் இடமும் நோக்கி வேறுநான்குவகையாகப் பிரிப்பர். அவை,1) இயற்சொல்2) திரிசொல்3) திசைச்சொல்4) வடசொல்*.இயற்சொல்:இயற்சொல்என்பது தமிழ் வழங்கு நிலத்தில்கற்றவர்க்கும்கல்லாதவர்க்கும் பொருள் விளங்குமாறு தொன்றுதொட்டுவழங்கிவரும் சொல்லாகும்.(எ.டு.) மரம், வந்தான்செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்(நன்னூல்:271)*.திரிசொல்:திரிசொல்என்பது கற்றவர் மட்டுமே பொருள்உணரக்கூடியது. இஃது ஒரு பொருள் குறித்த பலசொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் வரும்.(எ.டு)கிள்ளை, தத்தை, சுகம்-கிளி என்னும் ஒரு பொருள் குறித்தபல திரிசொல்.வாரணம்-யானை, கோழி, சங்கு முதலிய பல பொருள் குறித்த ஒரு திரிசொல்.ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும்பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்அரிதுணர் பொருளன திரிசொல் ஆகும்(நன்னூல் : 272)*.திசைச்சொல்:திசைச்சொல்என்பது செந்தமிழ் வழங்கும் நிலம்தவிர்த்த கொடுந்தமிழ் வழங்கும் நிலங்களில் வழங்கும்சொல்லும், வேற்றுமொழி பேசுவோர் தமிழ் நிலத்தில் வந்து தம்கருத்தைக் குறிக்க வழங்கும் சொல்லும் ஆகும்.(எடு.) சிறுகுளம் - பாழி என்பர் பூழிநாட்டார்- கேணி என்பர் அருவாநாட்டார்செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்ஒன்பதிற்று இரண்டினில் தமிழொழி நிலத்தினும்தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப(நன்னூல் : 273)*.வடசொல்:வடசொல்என்பது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உரியபொது எழுத்தாலும், சிறப்பெழுத்தாலும் இவ்விருமொழிகளுக்கும்உரிய எழுத்தாலும் வழங்கப்படும் சொல்லாகும். இதுதமிழ்ச்சொல்லுக்கு ஒப்பாக, வடதிசை மொழியானஆரியத்திலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்லாகும்.காரியம்-பொது எழுத்தால் அமைந்தன.போகி, சுத்தி-சிறப்பெழுத்தால் அமைந்தன.கடினம், சலம்-இருவகை எழுத்தாலும் அமைந்தன.பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும்ஈரெழுத் தானும் இயைவன வடசொல்(நன்னூல் : 274)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக