திங்கள், 1 ஜனவரி, 2018

தமிழ்விடு தூது

தமிழ் விடுதூது ஒரு தமிழ் சிற்றிலக்கிய நூல்.தூதுவகையைச் சேர்ந்தது. மதுரை சொக்கநாதர் (சிவன்) மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தமிழை அவர்பால் தூதாக அனுப்புவது போலப் பாடப்பட்டுள்ளது. இதனைப் பாடிய புலவர் பெயர் தெரியப்படவில்லை. நூலின் உள்ளடக்கத்தில் இருந்து தமிழ்ப்பற்றும், சைவ சமயப் பற்றும் உடையவர் என்பது மட்டும் புலனாகுகிறது. இந்த நூலைப் முதலில் அச்சில்வெளியிட்டவர்உ. வே. சாமிநாதையர். மொத்தம் 268கலிவெண்பாபாக்கள் உள்ள இந்நூலில் மதுரையில் நடைபெற்ற சிவனதுதிருவிளையாடல்  செய்திகள் இடம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக