சுமார் 3 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு அசிரியப் பேரரசின் நிர்வாகத் துறையில் ஏற்பட்ட குழப்பங்களை சென்னாசெர்ப் என்ற அரசர் நீக்க விரும்பினார். அரசாங்கத்தினர் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில்எழுதி, சூளைகளில் சுட்டுக் காயவைத்து பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படி ஆணையிட்டார்.மன்னரின் ஆணையையடுத்து, அரசாங்க ஒப்பந்தங்கள், கடிதங்கள், ஆணைகள், உளவு அறிக்கைகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் களிமண் தகடுகளில் எழுதப்பட்டன. பின்னர், சூளைகளில் சுட்டுஅரசாங்கக் கருவூலங்களிலும், கோவில் கருவறைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் மருத்துவக் குறிப்புகள், சமய நூல்களும் பாதுகாக்கப்பட்டன.அசிரியப் பேரரசின் கடைசி மன்னர் அகர்பானிபல் (கி.மு.700 _ கி.மு.600) ஆட்சியின்-போது, களிமண் தகடுகள் 30 ஆயிரத்திற்கும் அதிகமாகின. வெவ்வேறு இடங்களில் வைத்துப் பாதுகாப்பது மிகவும் கடினமாக இருந்தது.எனவே, அசிரியாவின் தலைநகரான (தற்போதைய ஈராக்) நினிவெக் (Nineveh) (தற்போது மோசுல்) என்னுமிடத்தில் அனைத்தையும் துறைவாரியாகப் பிரித்து அடுக்கி வைக்க மன்னர் ஆணையிட்டார். மன்னரின் ஆணைப்படி,துறைவாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டது.இதுவே உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் ஆகும். இந்த நூலகம் தி ராயல் லைப்ரரி ஆஃப் அஸ்குர்பனிபல் (The Royal Library of Ashurbanipal) என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக