வெள்ளி, 19 ஜனவரி, 2018

அனைவருக்கும் கல்வி

இந்திய அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளவாறு, பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி வழங்குவதை உறுதி செய்திட மக்கள் இயக்கமென உருவெடுத்த திட்டமே அனைவருக்கும் கல்வித்திட்டமாகும். இத்திட்டம்வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமூக, பொருளாதார, பாகுபாடின்மை, ஆண்,பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்வதற்கான அணுகுமுறைகளைக் கொண்டதாகும். அதிகாரப்பரவல் மூலமாக உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பங்களிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு ஏற்ற வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மக்களே முனைந்து நின்றுதங்கள் சொந்த நடவடிக்கையாக ஏற்று நடத்துவதால், இது “அனைவருக்கும் கல்வி இயக்கம்” என அழைக்கப்படுகிறது.திட்டக் குறிக்கோள்கள்*.பள்ளிவயதிலுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல்.*.பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைவரையும் எட்டாம் வகுப்பை வெற்றிகரமாக முடிக்கச் செய்தல்.*.அனைவருக்கும் வாழ்க்கைக்கு உகந்த தரமான கல்வியை உறுதி செய்தல்.*.சமூக, பொருளாதார அடிப்படையிலோ, ஆண், பெண் இன வேறுபாட்டினாலோ மாணவர்களின் சேர்க்கை, இடைநிறுத்தம், தொடர்ந்து படித்தல், கற்றலடைவு ஆகியவற்றில் ஏற்படும் இடைவெளியை முற்றிலுமாகக்களைதல்.*.பள்ளியில் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் இடைநிறுத்தமின்றிப் பள்ளிகளில் தக்கவைத்தல்.திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்பதினான்கு வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டம்.1.அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை உறுதியுடன் நிறைவேற்றும் திட்டம்.2.அடிப்படைக்கல்வியின் வாயிலாகச் சமூகநீதியை வளர்க்க வாய்ப்பளிக்கும் திட்டம்.3.ஊராட்சி மன்றம், கிராமக் கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்ற அமைப்புக்களை, ஆரம்பக் கல்வி நிர்வாகத்தில் ஈடுபடச் செய்யும் திட்டம்.4.அனைவருக்கும் கல்வி வழங்குவதில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் திட்டம்.5.மைய, மாநிலமற்றும் உள்ளாட்சிநிர்வாகங்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் திட்டம்.6.ஆரம்பக்கல்வி பற்றிய மாநில அரசின் தொலை நோக்குக் குறிக்கோள்களை இலக்கிட்டு காலவரம்புக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக