சனி, 20 ஜனவரி, 2018

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

நாலாயிர திவ்விய பிரபந்தம்பெருமாளைகுறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இதுஇந்துமதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள்வைணவசமயத்தில்ஆழ்வார்கள்12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தநாதமுனிகள்என்பார் ஆழ்வார்கள்அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு,திருவரங்கத்தமுதனார்செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல்தொகுப்பினையும் குறிக்கும்.இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பதுஇதன் சிறப்பு. இது,முதலாயிரம்-----------947 பாடல்கள்பெரிய திருமொழி----1134 பாடல்கள்திருவாய்மொழி------1102 பாடல்கள்இயற்பா---------------817பாடல்கள்என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக