தானியாகு பெயர்தானி என்றால் இடம்.இடம் என்பது இங்கே ஒரு பொருள் இருக்கின்ற இடத்தைக் குறிக்கின்றது.எடுத்துக்காட்டுவிளக்கு முறிந்தது.விளக்கு என்பது காரணப்பெயர். விளக்கம் தரும் சுடரினால்தான் விளக்கு. சுடர் முறியாது. விளக்கம் தருகின்ற தண்டு முறிந்து விட்டது. விளக்குக்காக அந்த இடம் ஆகி வருகிறது.பாலை இறக்கு.இதில் பாலின் பெயர், பாலைக் குறிக்காமல்பாத்திரத்தைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி), அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானத்திற்கு) பெயராகி வருவது தானியாகு பெயர் ஆகும்நன்னூல் பாடல் "பொருள் முதல் ஆறோடு அளவைசொல்தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகுபெயரே" -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக