சனி, 20 ஜனவரி, 2018

பல்துறை வேலைவாய்ப்புக்கள்

*.வினையே ஆடவர்க்குயிர், என்கிறது குறுந்தொகை.*.“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்கிறது தொல்காப்பியம்.*.சங்க காலத்தில் பொருளீட்டுவோர் ஆண்களே எனவும், பெண்கள் குடும்பத்தினை பொறுப்புடன் நடத்தவேண்டும் எனவும், பெண்கள் கடல்கடந்து செல்லககூடாதெனவும் கூறி வந்தனர்.*.நாள்தோறும் கல்வியில் புதுப்புதுத் துறைகள் உருவாகிககொண்டேவருகின்;றன.இராணுவம், காவல் துறைப் பணி:*.பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இராணுவம், காவல் முதலிய துறைகளில் சேர்வதற்கும் வாய்ப்புண்டு. இவற்றில் சேர முதலில் உடற்கூறு தேர்வு நடைபெறும்.*.உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனேஎன்னும் திருமுலர் வாக்குப்படிமுறையாக உடற்பயிற்சி செய்தவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற இயலும்.*.அதன் பிறகு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே, பணியில சேர இயலும்.*.ஓட்டுநர், நடத்துநர் முதலான பணிகளுக்கும் உடற்கூறு தகுதியுடையவர்கள் மட்டுமே சேர இயலும்.*.மக்கள் நலப்பணியாளர், சத்துணவு அனமப்பாளர் போன்ற பணிகளிலும் சேரலாம். இப்பணிகள் குறித்த தகவல்கள்அவ்வப்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்மூலம் ஊடகங்களில் வெளியிடப்படும்.“வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்”- கவிஞர் தாரா பாரதியின் பாடல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக