வெள்ளி, 19 ஜனவரி, 2018

அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய கல்வி

நாட்டில் மக்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு மனித ஆற்றல் மூலதனத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.அதே போல் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டின் அவசியத்தையும் 2015-16 பொருளாதார அறிக்கை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து பொருளாதார ஆய்வறிக்கை கூறியிருப்பதாவது:சமூக கட்டமைப்பில் கல்வி, சுகாதார சேவை, வீட்டு வசதி ஆகியவற்றை பெறுவதில் உள்ள இடைவெளியை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கல்வி பயன்பாடு, மேம்பட்ட சுகாதார இலக்கு ஆகியவற்றில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.மக்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கு மனித ஆற்றல் மூலதன முதலீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம்என்று 2015-16-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. கல்வி,சுகாதாரம், சமூகபாதுகாப்பு, ஊட்டச்சத்து, ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற சமூக சேவைகளுக்கான மொத்த செலவினம்2014-15-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏழு சதவீதமாக உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. 2013-14-ம் ஆண்டு இது 6.5 சதவீதமாகும்.கல்வித்துறையில் தனியார் மற்றும் பொதுத்துறை பள்ளிகளில் வாசிப்புத் திறன்நிலைமை குறைந்திருப்பது கல்வி பயன்பாட்டில் இறக்கம் காணப்படுவதை பிரதிபலிக்கிறது. 2007 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிப்பதில் 2007-ம் ஆண்டிலிருந்த திறன் 2014-ம் ஆண்டு கடும் வீழ்ச்சியடைந்திருப்பதாக 2014-ம் ஆண்டுக்கான கல்வி நிலைமை பற்றிய ஆண்டறிக்கை கூறுகிறது.பெண்கள் கல்வியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அநேகமாக, கல்வியின் எல்லா நிலையிலும் மாணவ-மாணவியருக்கு இடையில் சமநிலை எட்டப்பட்டுள்ளது. ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் போன்ற விளிம்பு நிலை மற்றும்வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கல்வியளிப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.பெண்கள் கல்வியில் குறைந்த செயல்பாடு உள்ள பகுதிகளை கண்டறிய உதவும் வகையில் பெண்கள் கல்வி பற்றிய வரைபடம் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. பள்ளியில் சேருவதையும், கற்கும் நிலையை மேம்படுத்துவதையும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித் தொகை திட்டங்களுக்கென தேசிய உதவித் தொகை இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக