தேவாரம்என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்,திருநாவுக்கரசு நாயனார்,சுந்தரமூர்த்தி நாயனார்ஆகியநாயன்மார்கள்தமிழில் பாடியுள்ளார்கள்.பாடலாசிரியர்கள்முதல் இருவரும்கிபி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர்கிபி 8ஆம் நூற்றாண்டிலும்இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன.பதிகம்என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.7ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலேபல்லவர்ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்தபௌத்தம்,சமணம்ஆகிய மதங்களுக்கெதிராகச்சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்தகோயில்கள்மீதுதேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரானசீர்காழியிலுள்ளதோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக