வெள்ளி, 5 ஜனவரி, 2018

காமராசரின் அரசியல்ஈடுபாடு

அரசியலில் ஈடுபாடு :*.காமராசர், பள்ளி செல்ல இயலாதபோதும் நாள்தோறும்செய்தித்தாள்களைப் படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார். மெய்கண்டான் புத்தகச்சாலை என்னும் நூல்நிலையத்திற்குச் சென்று இலெனின், கரிபால்டி, நெப்போலியன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து திறமையாகப் பேசவும் வாதம் புரியவும் தொடங்கினார். அவர், கட்சிக் கூட்டங்களை நடத்தினார், ஊர்வலங்களில் கலந்துகொண்டார், கொடி பிடித்தார், சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு  முதலிய போராட்டங்களில் கலந்துகொண்டார், சிறை சென்றார். பதினோராண்டுகள் சிறையில் கழித்தார். அவரது தன்னலமற்ற உழைப்பைக்கண்ட தலைவர் காமராசரை, தம் அரசியல் குருவாக  ஏற்றுக்கொண்டார். இவர், 1937 இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக